எசுப்பானிய திரிபுக் கொள்கை விசாரணை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 50:
அந்தலூசியாவிலிருந்த 1483இல் எல்லா யூதர்களும் வெளியேற்றப்பட்டனர். அரசர் பெர்டினான்டு திருத்தந்தையினை வற்புறுத்தி<ref>Kamen, ''The Spanish Inquisition'' op. cit., pp. 49-50.</ref> அக்டோபர் 17, 1483 அன்று அரகோனின் சமயத்துறப்பு விசாரணை தலைமை நீதிபதியாக ''தாமசு தெ தொர்குயிமடா''வை நியமித்தார்.
தொர்குயிமடா தனது பணியின் ஆரம்பத்தில் 33 நாள் அருள் காலம் அளித்து அதில் பதுங்கியிருக்கும் போலிகத்தோலிக்கரை வெளிப்படையாக
1484இல் [[எட்டாம் இன்னசெண்ட் (திருத்தந்தை)|திருத்தந்தை எட்டாம் இன்னசெண்ட்]] இத்தீர்ப்புகளுக்கு தன்னிடம் மேல்முறையீடு செய்யலாம் என அறிவித்தபோதும், அதனை ஏற்காமல் பெர்டினான்டு டிசம்பர் 1484இலும் மீண்டும் 1509இல் குற்றவாளிகளாக கண்டறியப்பட்டவர்களை அரச அனுமதியில்லமல் கொல்லவும், உடைமைகளை பறிக்கவும் கட்டளையிட்டார்.<ref>Kamen, ''The Spanish Inquisition'' op. cit., p. 157.</ref> இதனால், இவ்வமைப்பு அரச சேவையில் ஒரு பயனுள்ள கருவியாகவும், எசுப்பானிய முடியாட்சியின் அனைத்து பகுதிகளிலும் முழு அதிகாரம் பெற்ற ஒரே நிறுவனமும் ஆனது. எனினும் இதனை தொடர்ந்து எதிர்த்து வந்த அரகொன் மக்கள், 1484 முதல் 1485 வரை கிளர்ச்சியிலும் ஈடுபட்டனர். ஆயினும் செப்டம்பர் 15, 1485இல் நடந்த நீதிபதி பெத்ரோ அரூபெசின் கொலையானது மக்களை யூதர்களுக்கெதிராக திருப்பி சமயத்துறப்பு விசாரணைக்கு ஆதரவளிக்க வைத்தது.
இவ்விசாரணை 1480 மற்றும் 1530க்கு இடையே மிகவும் தீவிரமாக நடந்தது. பல்வேறு ஆதாரங்கள் இந்த காலத்தில் நடந்த மரணதண்டனைகளின் எண்ணிக்கையில் மாறுபட்ட மதிப்பீடுகளை அளிக்கின்றன; ஹென்றி காமென், சுமார் 2000 பேர் கொல்லப்பட்டிருக்காலாம் என்கின்றார். இதில் பெரும்பாலானோர் யூதர்கள்.<ref>Kamen, op. cit., p. 60.</ref>
|