'''மகா சிவராத்திரி''' இந்துக்களால்[[இந்து]]க்களால் கொண்டாடப்படும் சிவனுக்குரிய விரதமாகும். இவ்விரதம் வருடந்தோறும்ஆண்டுதோறும் [[மாசி|மாசி மாதத்தில்]] வரும் கிருஷ்ணபட்ச (தேய்பிறை) சதுர்த்தசி திதியில் இரவில் கொண்டாடப்படும். '''இராத்திரி''' என்பது இருட்காலம். உலக ஒடுக்க நிலையாகிய இரவு [[சிவன்|சிவனுக்கே]] உரியதாகும். அதனால், அந்த இரவை '''சிவராத்திரி''' என்பர். '''ராத்திரி''' என்பதற்குப் பூசித்தல் என்பதும் ஒரு பொருளாகும். சிவனைப் பூசிக்கத் தகுந்த இரவே '''சிவராத்திரி''' ஆகும். இதன் நோன்பு முறைகளைக் கூறும் நூல் [[மகா சிவராத்திரி கற்பம்]] என்னும் சிறிய நூல்.