சிவராத்திரி விரதத்துடன் தொடர்புடைய சோதிப்பிளம்பின்சோதிப்பிழம்பின் அடிஅடியும் நுனிநுனியும் தேடிய புராணக்கதையில் சிறப்பான தத்துவ உண்மை அடங்கியுள்ளது. [[அறிவு]] எல்லை மீறும் போது அகங்காரமாகி விடுகின்றது. செல்வம் எல்லை மீறும் போது செருக்கு ஏற்படுகின்றது. எனவேதான் அறிவுக் கடவுளான [[பிரம்மா|பிரம்மாவும்]] செல்வத்தின் அதிபதியான [[திருமால்|திருமாலும்]] அகங்காரம், செருக்கு என்பவற்றால் உந்தப்பட்டு, தாமே பெரியவர் என்று போட்டியிட்டனர். அதனால், அவர்களால் [[சிவன்|சிவபெருமானைக்]] காண முடியாது போயிற்று. அவரை [[அறிவு|அறிவாலும்]] செல்வத்தாலும் அளவிட்டு அறிந்து விட முடியாது; [[அன்பு|அன்பினாலும்]] [[பக்தி யோகம்|பக்தியினாலும்]] மட்டுமே அடைய முடியும் என்பதை உணர்த்துவதே '''சிவரத்திரி''' விரதத்தின் தத்துவமாகும்.