மகா சிவராத்திரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎சிவராத்திரி விரத நியதிகள்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
→‎சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்: பதிப்புரிமை மீறல் (தரம் ஒன்பது சமய நூல்)
வரிசை 87:
 
இவ்விரத்தைப் பற்றிய ஐதீகங்கள் பல உள்ளன. ஒரு காலத்தில் உலகப் பிரளயத்தின் போது உயிர்கள் எல்லாம் [[சிவன்|சிவனிடத்தே]] ஒடுங்கின. உலகங்களே தோன்றவில்லை. இந்த நிலையில் எல்லையில்லாக் கருணையுடைய அம்பிகை அண்டங்கள் தோன்றி இயங்கும் பொருட்டு இறைவனை இடைவிடாது தியானம் செய்தாள். அப்போது இறைவன் தன்னுள் ஒடுங்கி இருந்த உலகங்களை மீண்டும் உண்டாகச் செய்து உயிர்களையும் படைத்தருளினார். அப்பொழுது உமையவள் சுவாமி நான் தங்கள் மனதில் தியானித்துப் போற்றிய காலம் "சிவராத்திரி" என்று பெயர் பெறவேண்டும் என்றும் அதனைச் சிவராத்திரி விரதம் என்று யாவரும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அதை கடைப்பிடிப்பவர்கள் எல்லா நலன்களும் பெற்று முக்தியடையவேண்டும் என்று பிராத்தித்தார் இறைவனும் அவ்வாறே என்று அருள் புரிந்தார். அம்பிகையைத் தொடர்ந்து நந்தியம் பெருமான், சனகாதி முனிவர் சிவராத்திரி விரதம் அனுஷ்டித்து தங்கள் விருப்பம் நிறைவேறப்பெற்றார்.
 
== சிவராத்திரி விரதம் உணர்த்தும் தத்துவம்==
 
சிவராத்திரி விரதத்துடன் தொடர்புடைய சோதிப்பிழம்பின் அடியும் நுனியும் தேடிய புராணக்கதையில் சிறப்பான தத்துவ உண்மை அடங்கியுள்ளது. [[அறிவு]] எல்லை மீறும் போது அகங்காரமாகி விடுகின்றது. செல்வம் எல்லை மீறும் போது செருக்கு ஏற்படுகின்றது. எனவேதான் அறிவுக் கடவுளான [[பிரம்மா|பிரம்மாவும்]] செல்வத்தின் அதிபதியான [[திருமால்|திருமாலும்]] அகங்காரம், செருக்கு என்பவற்றால் உந்தப்பட்டு, தாமே பெரியவர் என்று போட்டியிட்டனர். அதனால், அவர்களால் [[சிவன்|சிவபெருமானைக்]] காண முடியாது போயிற்று. அவரை [[அறிவு|அறிவாலும்]] செல்வத்தாலும் அளவிட்டு அறிந்து விட முடியாது; [[அன்பு|அன்பினாலும்]] [[பக்தி யோகம்|பக்தியினாலும்]] மட்டுமே அடைய முடியும் என்பதை உணர்த்துவதே '''சிவரத்திரி''' விரதத்தின் தத்துவமாகும்.
 
== விரத காலங்களில் ஓதக் கூடிய தேவாரங்கள் ==
"https://ta.wikipedia.org/wiki/மகா_சிவராத்திரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது