'''நான் நாத்திகன் ஏன்''' (''Why i am an atheist'') என்பது இந்திய புரட்சியாளர் [[பகத் சிங்]]கால்கினால் [[லாகூர்]] சிறைக் கோட்டத்திலிருந்து அவரது தந்தைக்கு காவற்கூட அதிகாரிகளின் அனுமதியுடன் எழுதப்பட்ட கடிதமாகும். அக்கடிதத்தை பகத் சிங்கின் தந்தை லாகூரிலிருந்து வெளிவரும் ஜனங்கள் என்னும் ஆங்கில தினப் பத்திரிக்கையில் வெளியிட்டிருந்தார். இதனை [[சென்னை மாகாணம்|சென்னை மாகாண]] நாத்திக சங்க அமைச்சராக இருந்த [[ப. ஜீவானந்தம்]] புத்தக வடிவில் மொழிபெயர்த்தார். [[பெரியார்|பெரியாபெரியார் ஈ. வெ. ராமசாமியின்]] குடியரசு பதிப்பகம் இதனை வெளியிட்டது. இந்நூல் தடை செய்யப்பட்டு இதனை வெளியிட்டதற்காக ஜீவானந்தமும் பெரியாரும் 1934ல் கைது செய்யப்பட்டனர். இனி இது போன்ற செயல்களில் ஈடுபட மாட்டோம் என்று உறுதியளித்த பின்னர் விடுதலை செய்யப்பட்டனர்.