[[அண்ணாப்அண்ணாமலைப் பல்கலைக்கழகம்|அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில்]] படித்துக்கொண்டு இருந்த இவர், பகுத்தறிவுக் கொள்கையால் ஈர்க்கப்பட்டு [[1944]] ஆம் ஆண்டு[[சுயமரியாதை இயக்கம்|சுயமரியாதை இயக்கத்தில்]] சேர்ந்தார். இவ்வியக்கம் [[நீதிக்கட்சி]]யோடு இணைக்கப்பட்டு [[திராவிடர் கழகம்]] உருவானபொழுது அதில் தொடர்ந்தார். [[சி. என். அண்ணாதுரை|பேரறிஞர் அண்ணா]], [[1949]] ஆம் ஆண்டு [[திராவிட முன்னேற்றக் கழகம்]] தொடங்கிய போது அக்கட்சியின் ஐம்பெரும் தலைவர்களில் ([[அண்ணா]], [[ஈ. வெ. கி. சம்பத்]], நெடுஞ்செழியன், [[என். வி. நடராசன்]]. [[க. மதியழகன்]]) ஒருவராகத் திகழ்ந்தார். 1957 - 62ஆம் ஆண்டுகளில் அக்கட்சியின் இரண்டாவது பொதுச் செயலாளராக பதவி வகித்தார். அண்ணாவின் மறைவிற்குப் பின்னர் 1975ஆம் ஆண்டுவரை மீண்டும் பொதுச் செயலாளராகப் பதவிவகித்தார்.
1975ஆம் ஆண்டு தி.மு.க.வில் இருந்து பிரிந்து வந்து [[க. இராசராம்]] அவர்களுடன் இணைந்து [[மக்கள் திராவிட முன்னேற்றக் கழகம்]] என்னும் கட்சியைத் தொடங்கினார். 1977ஆம் ஆண்டில் அக்கட்சியை [[அ.தி.மு.க.]]வில் இணைத்தார். அதன்பின் அ.தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராகவும் பொதுச்செயலாளராகவும் சிலகாலம் இருந்தார்.