'''பேட் துவாரகை''' [[கட்சு வளைகுடா|கட்சு வளைகுடாவில்]] உள்ள சிறு தீவு. எனவே இதனைத் தீவுத் துவாரகை என்றும் பேட் துவாரகை <ref>http://www.gujarattourism.com/showpage.aspx?contentid=228&webpartid=887</ref>என்று அழைக்கின்றனர். துவாரகை நகரிலிருந்து 32 கி. மீ., தொலைவில் உள்ள ஒகா கடற்கரை வரை பேருந்தில் சென்று, பின் அங்கிருந்து விசைப்படகு மூலம் பேட் துவாரகையை அடையலாம். இங்கு [[கிருஷ்ணர்]] சங்கு சக்கரங்களுடன் காட்சி தருகிறார். இங்கு எழுந்தருளி இருக்கும் கிருஷ்ணரை துவாரகாநாத்ஜி என்று பெயர். இதைக் கிருஷ்ணனின் திருமாளிகையாகவும் சொல்கின்றனர். இங்கு தினந்தோறும் கண்ணனுக்கு குழந்தை போலவும், பிறகு அரசனைப் போலவும் அலங்காரங்கள் நடைபெறும். இங்கு ருக்மணி தேவிதான் உற்சவர். இங்கு [[கிருஷ்ணன்]], ஜாம்பவதி, லட்சுமி, நாராயணன் என மொத்தம் ஐந்து கோவில்களும் சங்க தீர்த்தம் என்னும் மிகப் புகழ்பெற்ற தீர்த்தமும் உண்டு.