மகாபலி சக்கரவர்த்தி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பலிச்சக்கரவர்த்தி''', ப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
No edit summary
வரிசை 1:
'''பலிச்சக்கரவர்த்தி''', [[பிரகலாதன்|பிரகலாதனின்]] பேரனும், விரோசனனின் மகனும் ஆவான். அரக்க குலத்தில் பிறந்த பலிச்சக்கரவர்த்தியின் கதை [[வாமண புராணம்வாமணர்|வாமண புராணத்தில்]] அமைந்துள்ளது. பலி அரசனானவுடன் இந்திராதி தேவர்களை வென்று மூவுலகையும் கைப்பற்றினான். [[இந்திரன்]], [[பிரம்மா]] முதலான தேவர்கள், பலிச்சக்கரவர்த்தியை அடக்க [[விஷ்ணு|விஷ்ணுவை]] வேண்டிதன் விளைவாக, விஷ்ணு [[வாமணர்|வாமண அவதாரம்]] எடுத்து, பலிச்சக்கரவர்த்தியிடம் சென்று தனக்கு நித்திய [[அக்கினி ஹோத்திரம்]] செய்ய மூவடி நிலம் தானமாக கேட்டார்.
 
பலிச்சக்கரவர்த்தி மூவடி நிலத்தை [[வாமணர்|வாமணனுக்கு]] தாரை வார்த்து தருகையில் அசுரகுல குருவான [[சுக்கிரன்|சுக்கிராச்சாரியார்]] நீரைத் தாரை வார்த்து தரும் சொம்பின் மூக்கில் வண்டு வடிவத்தில் அமர்ந்து சொம்புலிருந்து நீர் வராமல் தடை செய்தார். இதனை அறிந்த வாமணர் தருப்பைப் புல்லினால் தடையை நீக்கிட, சொம்புலிருந்து நீர் வர தானம் முடிந்தது.
"https://ta.wikipedia.org/wiki/மகாபலி_சக்கரவர்த்தி" இலிருந்து மீள்விக்கப்பட்டது