அம்பா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
சி added few points |
||
வரிசை 1:
'''அம்பா''' இந்திய இதிகாசங்களுள் ஒன்றான [[மகாபாரதம்|மகாபாரதத்தில்]] வரும் கதை மாந்தர்களுள் ஒருத்தி. இவள் [[காசி]] அரசனின் மூத்த மகளாவாள். [[அம்பிகா]], [[அம்பாலிகா]] என்போர் இவளது தங்கைகள் ஆவர். இவர்களுக்குச் சுயம்வரம் நடந்தபோது, அங்கிருந்த மன்னர்களையும், இளவரசர்களையும் தோற்கடித்து, இம் மூன்று பெண்களையும், [[பீஷ்மர்]] அவர்களது விருப்பத்துக்கு மாறாகக் கூட்டிச் சென்றார். அவர், இப்பெண்களை [[அத்தினாபுரம்|அஸ்தினாபுரத்து]] மன்னனான [[விசித்திரவீரியன்|விசித்திரவீரியனுக்கு]] மணமுடித்துக் கொடுப்பதற்காக [[சத்யவதி]]யிடம் ஒப்படைத்தார்.
அம்பா சால்வ நாட்டு மன்னனிடம் தனது மனதைப் பறிகொடுத்திருந்ததால் விசித்திரவீரியன் அவளை மணந்துகொள்ளாமல் அவளது தங்கைகள் இருவரையும் மட்டும் மணந்து கொண்டான். அம்பா தான் விரும்பியவனை நாடிச் சென்றாள்.
இமயமலைச் சாரல் சென்று தவம் செய்ததில் முருகக்கடவுள் ஒரு மாலையைக் கொடுத்தார். அதன் மூலம் பீஷ்மரைத் தண்டிக்கும் அவளது எண்ணம் நிறைவேறும் என்று கூறினார். அம்பை துருபத மகாராஜனை பீஷ்மர் மேல் படையெடுக்கத் தூண்டியும் அவன் இசையாததால், அம்மாலையை அங்கேயே வைத்து விட்டு சென்று மீண்டும் தவம் செய்தாள். சிவபெருமான் தோன்றி இன்னொரு பிறவியில் அவளே பீஷ்மரைப் பழிவாங்குவாள் என்று கூறினார்.
அடுத்த பிறவியிலாவது பீஷ்மரைக் கொல்வது எனச் சபதம் செய்து இறந்துவிட்டாள். அவள் அடுத்த பிறவியில் [[துருபதன்|துருபதனுக்கு]] மகனாகப் பிறந்தாள் என மகாபாரதம் கூறுகிறது. அவன் பெயர் [[சிகண்டி]] என்பதாகும். [[குருச்சேத்திரப் போர்|குருச்சேத்திரப் போரில்]] போரில் பீஷ்மர் இறந்ததில் முக்கிய பங்கு வகித்தவன் இவனாவான்.
==வெளி இணைப்பு==
* [http://mahabharatham.arasan.info தமிழில் முழு மஹாபாரதம்]
==உதவிநூல்==
*ஸ்ரீமஹாபாரத ஸாரம்; ஸ்ரீராமகிருஷ்ண மடம், சென்னை; பக்கம் 106
{{மகாபாரதம்}}
|