ஓய்வூதியர் குடும்ப பாதுகாப்பு நிதி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 19:
 
இத்திட்டத்தில் சேர விருப்பமில்லை என்று எழுத்து மூலமாக தெரிவித்துவிட்ட ஓய்வூதியரும் பின்னர் எப்போதுமே இத்திட்டத்தில் சேர முடியாது.
 
திட்டத்தின் நடைமுறைகள்
 
இத்திட்டத்தில் சேர விரும்பும் ஓய்வூதியர்களிடமிருந்து ச்ந்தா தொகையை அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் பிடித்தம் செய்வார். (அரசாணை எண் 639 நிதித்துறை நாள் 26.12.1997)
 
கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் இத்தொகை அவர்களுக்கு இயற்கையாகவே கிடைத்துவிடும். அவர்கள் உயிருடன் இல்லாதபோது அவர்கள் உயிருடன் இருந்தபோது நியமனம் செய்த ஒருவருக்கு இத்தொகை கிடைக்கும். ஒருவேளை ஓய்வூதியர் யாரையும் நியமனம் செய்யாமல் இறந்துவிட்டார் எனில் அவருடைய வாரிசுகளுக்கு இத்தொகை சமமாகப் பகிர்ந்து வழங்கப்படும்.
 
கணவன்/மனைவி உயிருடன் இருக்கும் பட்சத்தில் ஓய்வூதியர், ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்தில் நியமனப் படிவம் எதுவும் சமர்ப்பிக்கத் தேவையில்லை. கணவன்/ மனைவி உயிருடன் இல்லாத பட்சத்தில் ஓய்வூதியர் கண்டிப்பாக நியமனப் படிவம் சமர்ப்பிக்க வேண்டும்.
 
கணவன்/மனைவி உயிருடன் இல்லாத ஓய்வூதியர்கள் இத்திட்டத் தொகையை தான் விரும்பும் வாரிசு அல்லது வாரிசுகளுக்கு வழங்கச் சொல்லி ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் நியமனப் படிவம் தாக்கல் செய்யலாம்.
 
ஓய்வூதியர் நியம்னப் படிவத்தைப் பூர்த்தி செய்து இரண்டு நகல்களை ஓய்வூதியம் வழங்கும் அலுவலரிடம் சமர்ப்பித்து ஒப்புதல் பெறவேண்டும். அலுவலக கோப்பிற்காக ஒரு நகலைப் பெற்றுக்கொண்டு மற்றொரு நகலை ஓய்வூதியம் வழங்கும் அலுவலர் ஓய்வூதியரிடம் திரும்ப வழங்குவார்.
 
இவ்வாறு நியமனம் செய்யப்பட்டவர் அசம்பாவிதமாக இறக்க நேரிட்டால் ஓய்வூதியர் வேறு ஒருவரை புதியதாக நியம்னம் செய்து கொள்ளலாம்.