சப்த விடங்க தலங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
"==சப்தவிடங்கத் தலங்கள்== ச..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
||
வரிசை 1:
==சப்தவிடங்கத் தலங்கள்==
சப்தவிடங்கத்தலங்களின் தலைமையிடம் [[திருவாரூர்]] ஆகும். பிற விடங்கத்தலங்கள் [[திருநள்ளாறு]], [[நாகபட்டினம்]] எனப்படும் நாகைக்காரோணம், திருக்காராயில், [[திருக்குவளை]], திருவாய்மூர், [[வேதாரண்யம்]] ஆகியனவாகும். இக்கோயில்கள் அனைத்தும் நடனத்தை அடிப்படையாகக் கொண்ட வழிபாட்டுக் கோயில்கள் ஆகும். <ref> மகாமகம் 1992 சிறப்பு மலர் </ref>
==சப்தவிடங்கத் தலங்களின் இறைவன்==
சப்தவிடங்கத்தலங்களில் உள்ள இறைவன் பின்வரும் நிலையில் அமைகின்றனர்.
* திருவாரூர் - தியாகராசப்பெருமான்
* நாகைக்காரோணம் - சுந்தரவிடங்கர்
* திருக்காராயில் - ஆதிவிடங்கர்
# திருவாய்மூர் ▼
* திருக்குவளை - அவனிவிடங்கர்
* வேதாரண்யம் - புவனிவிடங்கர்
==சப்தவிடங்க நடனங்கள்==
ஒவ்வொரு தலத்திலும் இறைவன் ஆடும் ஆட்டத்திற்க ஒவ்வொரு பெயர் உள்ளது.
* திருவாரூர் தியாகராசப்பெருமான் - உயிரின் இயக்கமான மூச்சு உள்ளும் வெளியும் போய்வரும் உன்னத இயக்கத்தை உணர்த்தும் அஜபா நடனம்
* திருநள்ளாறு - பித்தன் ஆடுவது போன்ற உன்மத்த நடனம்
* நாகைக்காரோணம் - கடல் அலைகள் எழுவது போன்று உள்ள தரங்க நடனம்
* திருக்காராயில் - கோழியைப் போல் ஆடும் குக்குட நடனம்
* திருக்குவளை - வண்டு மலருக்கும் குடைந்து குடைந்து ஆடுதல் போன்று உள்ள பிருங்க நடனம்
* திருவாய்மூர் - தாமரை மலர் அசைவது போன்றுள்ள கமல நடனம்
* வேதாரண்யம் - அன்னப்பறவை அடியெடுத்து வைத்தாற்போலுள்ள ஹம்சபாத நடனம்
==மேற்கோள்கள்==
|