முண்டக உபநிடதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 17:
==உபநிடத சாரம்==
எந்த ஒன்றின் அறிவை அடைந்தால் அனைத்தும் அறிந்தது ஆகும் என்று கேட்ட சீடனின் கேள்விக்கு குருவானவர் “பரா வித்யா” என்று அழைக்கப்படும் [[மெய்ப் பொருள்]] அறிவு எனும் ஆத்ம வித்யா, (பிரம்மக்ஞானம்) என்ற அறிவை அடைந்தவனே அனைத்தும் அறிகிறான். [[பிரம்மம்|பிரம்மத்தை]] புரிந்து கொள்ளும் அறிவே '''பராவித்யா''' ஆகும். பிரம்மத்தை தவிர அறியப்படும் மற்ற அனைத்து அறிவுகளும் '''அபரா வித்யா''' ஆகும்.
 
 
பானைகள் செய்ய களிமண் உபாதான காரணம் என்றால் அதை செய்யும் குயவன் நிமித்த காரணம் ஆகிறான். ஆனால் பிரம்மன் படைக்கப்பட்ட அனைத்து பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கும் நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளார். எ.கா.,சிலந்தி பூச்சியானது தான் உருவாக்கிய வலைக்கு தானே நிமித்த காரணமாகவும், உபாதான காரணமாகவும் உள்ளதோ, அதே போல் படைப்பிற்கு [[பிரம்மம்]] ஒன்றே இந்த இரண்டு காரணங்களுக்கு ஒருவராகவே உள்ளார்.
 
 
ஆகவே பிரம்மத்தை அறிந்தால் அனைத்தும் அறிந்ததற்கு சமம். மேலும் அபரா வித்யா என்ற நான்கு வேதங்களும் அவற்றின் பகுதிகளான சீட்சா, கல்பம், இலக்கணம், நிருத்தம், சந்தசு, [[சோதிடம்|ஜோதிஷம்]] ([[வானவியல்]]), ஆகியவைகளை விளக்குகிறது. கர்மங்களின் பலன்களும், அதனால் அடையப்படும் நிலையற்ற தன்மை விளக்கப்படுகிறது.
 
 
அபராவித்யா மூலம் மாபெரும் சம்சாரக்கடலை கடக்க முடியாது. கர்மயோகத்தை விட ‘உபாசனை’ மூலம் சுவர்க்கத்திற்கும் மேலான பிரம்மலோகத்தை அடையலாம். பொதுவாக சுவர்க்கம் மற்றும் பிரம்மலோகத்தை அடைந்தாலும் அதன் பலன்கள் நிலையற்றது.
 
 
[[வீடுபேறு]] அடைய [[கர்ம யோகம்]] நேரடியான வழி அல்ல என்பதை உணர்ந்து, மரபு வழியாக வந்த குருவிடம் பிரம்ம ஞானத்தை அறிந்து வீடுபேறு அடைய வேண்டும். பிரம்மத்திடமிருந்து [[பஞ்சபூதங்கள்]], பிராணன், மனம், சித்தம், அகங்காரம் தோண்றின. படைக்கப்பட்ட பிரபஞ்சத்திற்கும், சீவராசிகளுக்கு தலைவனாக விளங்கும் பிரம்மத்தை [[விராட்]] என்பர்.
"https://ta.wikipedia.org/wiki/முண்டக_உபநிடதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது