முதலாம் அமோகவர்சன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
{{இராஷ்டிரகூடர் மரபு}}
'''முதலாம் அமோகவர்சன்''' அல்லது முதலாம் அமோகவர்ச நிருபதுங்கன் (கன்னடத்தில்: ಅಮೋಘವರ್ಷ ನೃಪತುಂಗ) (800-878 ) என்பவன் ஒரு புகழ் பெற்ற [[இராஷ்டிரகூடர்|இராஷ்டிரகூடப்]] பேரரசனாவான். இவன் 64 ஆண்டுகள் ஆட்சிபுரிந்து சாதனைப்படைத்தவன். பல கன்னட மற்றும் சமஸ்கிருத அறிஞர்கள் இவனால் ஆதரிக்கப்பட்டனர் அவர்களில் சிலர், அக்கால இந்தியக் கணிதவியலாளரும், ''கணித சார சம்கரகா'' என்ற நூலின் ஆசிரியருமான, மகாவைரச்சார்யா, ஜினேசன , விரசினா , ஷகடயான், ஸ்ரீ விஜயா (ஒரு கன்னட மொழி கோட்பாட்டாளர்) ஆகியோர் ஆவர். <ref name="scholar">Kamath (2001), p79</ref> முதலாம் அமோகவர்சன் ஒரு திறமையான கவிஞனாகவும், அறிஞனாகவும் இருந்துள்ளான். '''கவிராஜமார்க''' என்னும் பழங்கன்னட நூலை இவன் (தனியாகவோ அல்லது கூட்டாகவோ) எழுதியுள்ளான். <ref name="guide">Narasimhachraya (1988), p2,p12,p17</ref><ref name="writing">Sastri (1955), p. 355.</ref>மேலும் சமஸ்கிருதத்தில் '''பிரஷநோடர ரத்ணமாலிகா''' என்ற சமய நூலும் எழுதியதாகக் கருதப்படுகிறது. இவன் நிருபதுங்க, அதிசதவள, வீரநாராயணன், ரட்டமார்தண்ட, சிறீவல்லபன் போன்ற பட்டங்களைச் சூடிக்கொண்டிருந்தான். இவன் இராஷ்டிரகூடர்களின் தலைநகரை தற்கால கர்நாடகத்தின் பீதர் மாவட்டத்தில் உள்ள மயூர்கண்டியிலிருந்து குல்பர்கா மாவட்டத்தின் மன்யகட்டா என்ற இடத்திற்கு மாற்றினான். இந்தத் தலைநகரம் சிறந்த முறையில் திட்டமிட்டு இந்திரனின் நகரைப் போன்று சிறப்பானதாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் வடிவமைக்கப்பட்டது.<ref name="fine">Sastri (1955), p. 146.</ref>அராபிய பயணியான சுலைமான் உலகின் நான்கு பெரிய மன்னர்களுள் ஒருவரானாக அமோகவர்சனை விவரித்துள்ளார். மேலும் அமோகவர்சன் முஸ்லிம்களை மதித்துத் தனது நகரங்களில் மசூதிகள் கட்ட அனுமதித்தான் என்று எழுதியுள்ளார் <ref>The Shaping of Modern Gujarat: Plurality, Hindutva, and Beyond; Acyuta Yājñika, Suchitra Sheth, Penguins Books, (2005), p.42, ISBN 978-0-14400-038-8</ref> இவனது சமயநோக்கு, கலை இலக்கிய ஆர்வம் மற்றும் சமாதானத்தை விரும்பும் இயல்பால், புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் பஞ்சமுகி அவரைப் பேரரசர் அசோகருடன் ஒப்பிட்டு "தென்னிந்திய அசோகர்" என்று குறிப்பிடுகிறார்.<ref name="Ashoka">Panchamukhi in Kamath (2001), p80</ref> மொழி, இலக்கியம், பண்பாடு, ஆகியவற்றின் மீது அமோகவர்சன் கொண்ட ஆர்வமும் ஈடுபாடும் அவனது ஆக்கமான கவிராஜமார்க்க நூலினால் தெரிகிறது.<ref>M. V. Krishna Rao (1936), ''The Gangas of Talkad: A Monograph on the History of Mysore from the Fourth to the Close of the Eleventh Century'', p.80</ref>
 
==ஆரம்பக் காலம்==
"https://ta.wikipedia.org/wiki/முதலாம்_அமோகவர்சன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது