சமணர் மலை, மதுரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி →மேற்கோள்கள்: {{commons category|Samanar Malai}} |
No edit summary |
||
வரிசை 3:
== செட்டிப்புடவு ==
[[File:Jain Sculpture from the Samanar Malai, Madurai..JPG|thumb|செட்டிப்புடவு]]
சமணர் மலையின் தென்மேற்கு பகுதியில் சிற்பங்களுடன் கூடிய குகை ஒன்று காணப்படுகிறது. இந்த குகையின் இடதுபுற பாறை முகப்பில் புடைப்புச்சிற்பமாக செதுக்கப்பட்டுள்ள அழகிய முக்குடை அண்ணலின் (மகாவீரர்) காதுநீண்ட உருவம் ஒரு செட்டியாரைப் போல் தோற்றமளிக்கிற காரணத்தால் செட்டிப்புடவு என அழைக்கப்படுகிறது.இச்சிற்பத்தில் [[மகாவீரர்|மகாவீரர்]], இருபுறமும் சாமரம் வீசுபவர்கள் சூழ, முக்குடைக்கு மேலே வானவர்கள் பறந்துவர, அரசமரத்தின்கீழ், மூன்று சிம்மங்கள் தாங்கும் ஆசனத்தில் அமர்ந்திருக்கிறார். அதன் கீழே இச்சிற்பத்தை செய்து கொடுத்தவரைப் பற்றிய [[வட்டெழுத்து|வட்டெழுத்துக்]] கல்வெட்டு காணப்படுகிறது.
வரி 13 ⟶ 14:
== பேச்சிப்பள்ளம் ==
[[File:RELICS OF JAINS - Bas-relief sculptures.jpg|thumb|பேச்சிப்பள்ளம்]]
இந்த மலையில் இயற்கையாக அமைந்த ஒரு சுனை உள்ளது.இந்த சுனையே பேச்சிப்பள்ளம் என்று அழைக்கப்படுகிறது.பேச்சிப்பள்ளத்தில் எட்டு தீர்த்தங்கரர் சிற்பங்களும், வட்டெழுத்துக் கல்வெட்டுக்களாக செதுக்கியவர் பெயர்களும் உள்ளன. இங்கு பாகுபலி (கோமதேஸ்வரர்), பார்சுவநாதர், முக்குடைநாதர் சிற்பங்கள் உள்ளன.அச்சணந்தி முனிவரின் தாயார், இங்கு செயல்பட்ட பள்ளியின் தலைவர் குணசேனதேவர், குறண்டி திருக்காட்டாம் பள்ளியைச் சேர்ந்தோர் முதலியோர் இச்சிற்பங்களைச் செய்துள்ளதை இங்குள்ள கல்வெட்டுகளிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
வரி 33 ⟶ 34:
மாதேவிப் பெரும்பள்ளியின் அடித்தளம் அமைந்துள்ள பகுதியிலிருந்து மலையுச்சியிலுள்ள தீபத்தூணை நோக்கிச் செல்லாமல், மலையின் தென்புறம் நோக்கிச் சென்றால் அங்குள்ள பாறையின் கீழ் தமிழிக் கல்வெட்டு ஒன்று காணப்படுகிறது. இக்கல்வெட்டை 2012ல் தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக முனைவர் பட்ட ஆய்வு மாணவர் திரு.முத்துக்குமார் கண்டுபிடித்துள்ளார். இக்கல்வெட்டை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் கல்வெட்டு வல்லுநர்கள் முனைவர் சொ.சாந்தலிங்கம், பொ.இராசேந்திரன், சொ.சந்திரவாணன் ஆகியோர் படித்துப் படியெடுத்துள்ளனர். ''"பெருதேரூர் குழித்தை அயஅம்"'' என 13 எழுத்துக்களை இத்தமிழ் பிராமிக் கல்வெட்டு கொண்டுள்ளது. இதன் காலம் கி.மு இரண்டாம் நூற்றாண்டு. பெருந்தேரூரார் செய்த கற்படுக்கை என்பது இதன் பொருளாகும்<ref>மதுர வரலாறு, 2013, பசுமைநடை, மதுரை</ref>.
==இதனையும் காண்க==
* [[ஒத்தக்கடை]]
==மேற்கோள்கள்==
|