'''திருப்பதி''' [[இந்தியா]]வில் உள்ள [[ஆந்திரப் பிரதேசம்|ஆந்திரப் பிரதேசத்தின்]] தென்கிழக்குப் பகுதியில் உள்ள [[சித்தூர் மாவட்டம்|சித்தூர் மாவட்டத்தில்]] அமைந்துள்ள '''திருப்பதி''' ஒரு வைணவ தலமாகும். இந்தியாவில் உள்ள மிக முக்கிய திருத்தலங்களில் இது ஒன்று. இங்கு பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருகின்றனர். இத்தலம் வைஷ்ணவர்களின் 108 திவ்விய தேசங்கள் என்றழைக்கப்படும் கோவில்களில் திருவரங்கத்திற்கு அடுத்தபடியாக இரண்டாம் இடத்தில் வைத்துக் கொண்டாடப்படுகிறது. இந்த பகுதியில் [[திருப்பதி வெங்கடாசலபதி கோயில்|ஸ்ரீ வெங்கடேசப் பெருமாளின்[[ கோயிலுள்ள [[திருமலை|திருமலையும்]] ஸ்ரீ பத்மாவதி தாயாரின் கோவிலுள்ள திருப்பதியும் இரு நகரங்களாக விளங்கினாலும் பொதுவில் திருப்பதி என்றே பக்தர்களால் போற்றப்படுகிறது. திருமலை மேல்திருப்பதி என்றும் மற்றது கீழ்திருப்பதியெனவும் குறிப்பிடப்படுகிறது.