காருக்குறிச்சி அருணாசலம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி இசைக்கலைஞர் - நாகசுரக் கலைஞர் |
No edit summary |
||
வரிசை 1:
'''காருகுறிச்சி அருணாசலம்''' (1907-1964) தமிழகத்தில் புகழ்பெற்ற நாகசுரக் கலைஞர்.
▲'''பிறப்பு'''
திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள காருகுறிச்சி எனும் ஊரில் 1907 ஆம் ஆண்டில் இவர் பிறந்தார். இவரின் தந்தையின் பெயர் பலவேசம்பிள்ளை.
==இசைத்துறை நுழைவு==
காருகுறிச்சியிலிருந்த பெரும் பண்ணையாரின் இல்லத் திருமணத்திற்குக் கூறைநாடு நடேசபிள்ளை என்னும் பிரபலமான நாகசுரவித்வான் வந்திருந்தார். அவருடைய பணி மாப்பிள்ளை அழைப்பிற்கு நாகசுரம்
அருணாசலம் அவர்கள் சுத்துமல்லி சுப்பையா கம்பர் என்பவரிடம் நாகசுரமும், களக்காடு சுப்பையா பாகவதரிடம் வாய்ப்பாட்டும் பயிலத் தொடங்கினார். கற்றபின் சிறிய சிறிய கச்சேரி வாய்ப்புகள் வந்தபோதும், கலைமேல் உள்ள விருப்பத்தால் இன்னும் அதிகம் கற்க விரும்பினார். தஞ்சை மண்ணில் பிறந்த நாகசுரக் கலைஞரிடம் கற்றால்தான் இன்னும் கலை மெருகேறும் என்று பலவேசம் நினைத்தார். அதன்படி திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் சேர்க்கச் சென்றார்.
திருவாவடுதுறை இராசரத்தினம்பிள்ளையிடம் தன் பிள்ளையைச் சீடானக்குவது எப்படி? யார் அவனை அழைத்துச் செல்வார்கள் ? என்றெல்லாம் பலவேசம் சிந்தனை செய்தார். இதற்கிடையில், காருகுறிச்சியில் உள்ள கு.எ. பண்ணையில் நாகசுரம் வாசிக்க வந்திருந்தார் திருவாவடுதுறையார். அவருடன் வாசிக்கவந்த “காக்காயி” நடராச சுந்தரத்திற்கு உடல்நிலை சரியில்லாமல்போகவே, துணைக்கு யாராவது ஒரு சிறு பிள்ளை வேண்டும் என்றார் திருவாவடுதுறையார். மணிசர்மா என்பவர் உடனே சென்று அருணாசலத்தை அழைத்துவந்து அறிமுகப்படுத்தினார். பையனின் திறமையைக்கண்ட ராசரத்தினம்பிள்ளை, தன்னுடனே இருக்கட்டும் என்று கூறினார். பழம் நழுவிப் பாலில் விழுந்த கதையாகவிட்டது. அன்று முதல், காருகுறிச்சி அருணாசலம், திருவாவடுதுறை ராசரத்தினம்பிள்ளையின் சீடரானார்.
காருகுறி்ச்சியாரிடம் மக்கள் நன்மதிப்பு தந்திருந்தனர். தம்பிக்கோட்டைப் பண்ணையார் பாலசுப்பிரமணிய தேவர் போன்றவர்கள் அவரிடம் உயிரையே வைத்திருந்தனர்.
சென்னைத் தமிழிசைச்சங்கத்தின் இசைவிழாவில் நடைபெற்ற காருகுறிச்சி அருணாசலத்தின் நாகசுரக் கச்சேரியை, வானொலி நிலையத்தார், வழக்கத்திற்கு மாறாக, நள்ளிரவு வரை ஒலிபரப்பினர்.
காருகுறிச்சி அருணாசலத்தின் கச்சேரிக்குப் பலர் தவில் வாசித்திருந்தாலும், புகழ்பெற்ற சில தவில்கலைஞர்கள் உடன் வாசித்திருந்தனர். திருமுல்லைவாயில் முத்துவீர்ப்பிள்ளை, கும்பகோணம் தங்கவேல் பிள்ளை, நாச்சியார்கோவில் ராகவாப்பிள்ளை, வலங்கைமான் சண்முகச்சுந்தரம்பிள்ளை, வடபாதிமங்கலம் தட்சிணாமூர்த்தி பிள்ளை, பெரும்பள்ளம் வெங்கடேசபிள்ளை, கரந்தை சண்முகப் பிள்ளை, நீடாமங்கலம் சண்முகப்பிள்ளை, யாழ்ப்பாணம் தட்சிணாமூர்த்திபிள்ளை ஆகியோர் குறிப்பிடத்தகவர் ஆவர்.
அருணாசலம் தனது நாகசுர இசையைக் கிராமபோன் இசைத்தட்டுகளில் பதிவு செய்திருப்பதோடு, சில திரைப்படங்களிலும் வழங்கியுள்ளார். “கொஞ்சும் சலங்கை” என்னும் திரைப்படத்தில், எஸ்.ஜானகி பாட, அருணாசலம் நாகசுரம் வாசித்துள்ள. “சிங்காரவேலனே” என்ற பாடல் மிகவும் பிரபலமானதாகும்.
கோவில்பட்டியில் உள்ள தன் இல்லத்தில், 08.04.1964 ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.
மங்கல இசை மன்னர்கள்-தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம்பிள்ளை - மெய்யப்பன் தமிழாய்வகம் - சிதம்பரம் -டிச. 2001▼
▲*மங்கல இசை மன்னர்கள்-தஞ்சாவூர் பி.எம்.சுந்தரம்பிள்ளை - மெய்யப்பன் தமிழாய்வகம் - சிதம்பரம் -டிச. 2001
'''வெளிஇணைப்புகள்'''▼
# [http://solvanam.com%20›%20இயலிசை solvanam.com › இயலிசை]
# [http://www.sramakrishnan.com/?p=652 www.sramakrishnan.com/?p=652]
|