யானை ஆண்டு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary |
|||
வரிசை 10:
நிகழ்ந்த சம்பவத்தை அறிந்த அப்ரஹா கடுமையான கோபத்தோடு, மக்காவிலிருக்கும் அரேபியர்களின் யாத்திரைத் தலமாகிய கஃபாவைத் தரைமட்டமாக்கத் திடசங்கற்பம் கொண்டு, முன்னிலையில் யானையொன்றை கொண்ட மாபெரும் படையைத் தயார் செய்தார். ஏமனில் வாழ்ந்த அரேபியர்கள் இதைக் கேள்விப்பட்டு படையெடுப்பைத் தடுத்து நிறுத்த முனைந்ததனால் அப்ரஹாவால் சிறைப்பிடிக்கப்பட்டனர். அவர்களின் தலைவனான நுபைல் என்பவன் தனது உயிருக்குப் பயந்து படையினருக்கு வழிகாட்ட ஒப்புக்கொண்டார்.
படையினர் அரேபியாவின் 'தாயிப்' என்ற இடத்தை அடைந்ததும், அங்கு வாழ்ந்திருந்த தகீப் கோத்திர அரேபியர்கள், தம்முடைய கோவிலை அப்ரஹாவின் படைகள் அழித்துவிடுமோ என்று அஞ்சினார்கள். அதனால் அவர்கள் படையினரைச் சந்தித்து, "நீங்கள் தேடி வந்த இடம் இதுவல்ல" என்று கூறி மக்காவைச் சென்றடைய வழிகாட்டி ஒருவனையும் கொடுத்துதவினார்கள். கூட்டிச்சென்ற வழிகாட்டி 'முகம்மிஸ்' என்ற இடத்தில் மரணித்ததனால் அவனின் உடல் அங்கேயே அடக்கம் செய்யப்பட்டது.
===உசாத்துணை===
|