'''பாம்பன் குமரகுருதாச சுவாமிகள்''' ( [[ஆங்கிலம்|English]] : Pamban Gurudasa Swamigal ) , (பி.18501848-52<sup>அ</sup>,இ.மே 30,192950) [[தமிழ்நாடு|தமிழ்நாட்டில்]] [[இராமேசுவரம்|இராமேசுவரம் தீவில்]] அமைந்துள்ள [[பாம்பன்]] என்ற ஊரில் பிறந்த வடமொழி, தென்மொழி இரண்டிலும் புலமைபெற்று [[முருகன்|ஆறுமுகனை]] வழிபட்டு வந்த ஓர் தமிழ்த்துறவி ஆவார். [[திருஞானசம்பந்தர்]], [[அருணகிரிநாதர்]] வழியில் [[சித்திரக் கவிகள்]] எழுதியுள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் தமிழுக்கும் சைவ நெறியாகிய குகப்ரம்ம நெறிக்கும் தனது பாடல்களாலும், சாத்திரங்களாலும் தொண்டாற்றினார். [[முருகன்|முருகனின்]] வழிபாடாக இவர் இயற்றிய பாடல்கள் 6666. இவை ஆறு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவரியற்றிய [[s:சண்முக கவசம்|சண்முக கவசம்]] புகழ்பெற்றது. பாம்பன் சுவாமிகள் மே 30, 1929 அன்று சமாதி அடைந்தார். அவரது சமாதி கோவில் [[சென்னை]], [[திருவான்மியூர்|திருவான்மியூரில்]] உள்ளது.<ref>[http://pambanswamigal.com/swamihistory.asp சுவாமிகள் வரலாறு]</ref>
==வாழ்க்கைக் குறிப்பு==
பழந்தமிழ்க் குடியான [[அகமுடையார்|அகம்படியர்]] குடியில் சாத்தப்பப் பிள்ளை என்பாருக்கும் செங்கமலம் என்பாருக்கும் மகனாக தோராயமாக [[1848-1850]] ஆம் ஆண்டு இராமேசுவரத்தை அடுத்த பாம்பனில் பிறந்தார். இவரது இயற்பெயர் அப்பாவு என்பதாகும். [[1866]] ஆம் [[ஆண்டு]] உள்ளூர் [[கிறித்தவம்|கிருத்துவப்]] [[பள்ளிக்கூடம்|பள்ளியில்]] பயின்றார். முனியாண்டிப் பிள்ளை என்பாரிடம் [[தமிழ் மொழி|தமிழ்]] கற்றார். சிறுவயதில் இவருக்கு கந்தர் சட்டிக் கவசம் மிகவும் ஈர்த்த நூலாகும். இதுவே இவர் பின்னாளில் [[சண்முக கவசம்]] இயற்ற தூண்டுதலாக இருந்தது. சேது மாதவ அய்யர் என்பாரிடம் வடமொழியும் கற்கலானார்.
தமது 12,13 வயதிலேயே கவிபாடும் திறமை பெற்றிருந்தார். இவருடைய முதல் பாடல் ஆசுகவியாக உருவாகிய "கங்கையைச் சடையில் பதித்து" எனத் தொடங்குவது. அருணகிரிநாதரை ஞானகுருவாகக் கொண்ட இவர் பின்னாளில் ’உபய அருணகிரிநாதர்’ என்ற பெயரும் பெற்றார்.<ref name="சுவாமிகள்">அமுதசுரபி தீபாவளி மலர் 2004; ஸ்ரீ பாம்பன் சுவாமிகள்; பக்கம் 150,151,152</ref>