அமதெரசு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சி AntanOஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
வரிசை 1:
{{unreferenced}}
[[File:Amaterasu.png|right|thumb|அமதெரசு குகையில் இருந்து வெளிப்படுதல்]]
 
வரி 5 ⟶ 6:
கதிரவக் கடவுளான அமதெரசு புயல் மற்றும் கடல் கடவுள் ''[[சுசானவோ]]'' மற்றும் நிலா கடவுள் ''[[சுக்குயோமி]]'' ஆகியோரின் உடன்பிறந்தவர் ஆவர். இவர்கள் மூவருமே ''[[இசநாகி]]''யின் சுத்தப்படுத்தும் சடங்கின் மூலம் பிறந்தனர். இசநாகி தன் இடது கண்ணைக் கழுவிய போது அமதெரசுவும், வலது கண்ணை கழுவிய போது சுக்குயோமியும் மூக்கைக் கழுவிய போது சுசானவோவும் பிறந்தனர்.
ஆரம்பத்தில் அமதெரசு தன் உடன்பிறந்தவரான சுக்குயோமியுடன் சேரந்து வானத்தை சரிநிகராக ஆண்டு வந்தார். ஒருநாள் அமாதெரசு தன் உயிர்த் தோழியான உணவு கடவுள் ''உகே மோச்சி'' அழைத்த விருந்திற்கு தனக்கு பதிலாக சுக்குயோமியை சென்று வருமாறு அனுப்பினார். அங்கு சென்ற சுக்குயோமிக்கு உகே மோச்சியின் உணவு பரிமாறிய விதம் சற்றும் பிடிக்காத்தால் அவரைக் கொன்றார். இதையறிந்து கோபமுற்ற அமாதெரசு இனி சுக்குயோமியின் முகத்தில் விழிக்கவே மாட்டேன் என்று கூறி அவரை விட்டு நிரந்தமாகப் பிரிந்தார். பிறகு சுக்குயோமி பாதாளத்திற்குச் சென்றதால் அவரது ஒளி குன்றியது. அமதெரசு காலை நேரத்திலும் சுக்குயோமி இரவு நேரத்திலும் வானத்தை ஆட்சி செய்தனர். இதுவே காலையும் மாலையும் தோன்றக் காரணமானது.
இசநாகி சுசானவோவை விண்ணுலகை விட்டு செல்லுமாறு கட்டளையிட்டார். சுசானவோ இறுதியாக அமதெரசுவை சந்தித்து விடைபெற்றுச் செல்ல நினைத்தான். ஆனால் அமதெரசு அவரை நம்பவில்லை. இதனால் சுசானவோ தன்னை நிரூபிக்க்க ஒரு சவால் விடுத்தான். அந்த சவாலின் படி பொருட்களில் இருந்து கடவுள்களை உருவாக்க வேண்டும். சுசானவோவின் வாளின் மூலம் அமதெரசு மூன்று பெண் கடவுள்களை உருவாக்கினார். சுசானவோ அமதெரசுவின் அணிகலன் மூலம் ஐந்து ஆண் கடவுள்களை உருவாக்கினார், பிறகு அமதெரசு ஆண் கடவுள்கள் தன் அணிகலனில் இருந்து பிறந்த்தால் தனக்கே உரிமையானது என்றார். இதனால் இருவருக்கும் சண்டை நடந்தது. முடிவில் அமதெரசு கோபத்துடன் ''அம-னோ-இவாடோ'' என்ற குகையில் மறைந்து கொண்டார். இதனால் உலகம் இருண்டது. இதற்கு தண்டனையாக சுசானவோ விண்ணகத்தில் இருந்து முற்றிலுமாக வெளியேற்றப்பட்டார்.
உலகில் இருள் சூழ்ந்து உயிரினஙக்ள் அனைத்தும் துன்ப்ப்பட்டன. அமதெரசுவை திரும்பக் கொண்டு வர அனைத்து கடவுள்களும் திட்டம் தீட்டினர். பிறகு அமெ-னோ-உசுமே என்ற கடவுள்.அதற்காக ஒரு மரத்தில் ''யாடா-நோ-ககாமி'' என்னும் கண்ணாடியையும் ''யசகானி நோ மகடமா'' என்னும் முத்து நகையையும் குகையின் வாயிலுக்கு நேர் எதிராக கட்டி வைத்தார்வைத்தனர். பிறகு அவர்ஆடிப்பாடி தன் ஆடையைக் கிழித்துக் கொண்டு உற்சாகமாக நடனமாடினார். அது வேடிக்கையாக இருந்ததால் அனைவரும் சிரித்தனர்மகிழ்ந்தனர். அந்த சத்தங்களைக் கேட்ட அமதெரசு அதற்கான காரணத்தை அறிய சிறிய துளை வழியாக வெளியே நோக்கினார். அப்போது சில கடவுள்கள் தங்களுக்கு வேறு ஒரு புதிய கதிரவ கடவுள் கிடைத்துவிட்டதாக கூறி மகிழ்ந்து கொண்டாடினர். இதைக்கேட்டு கோபமடைந்த அமதெரசு குகையின் வாயிலை உடைத்துக் கொண்டு வெளிப்பட்டார். அப்போது அவர் தன் முன்னே கட்டப்பட்டிருந்த கண்ணாடியில் தன் பேரொளி வீசும் முகத்தை பார்த்தார். அதனால் அவரது ஒளி பிரதிபலிப்படைந்து இருண்ட பூமியில் பட்டது. இதனால் பூமி பழைய நிலைக்கு திரும்பியது. பயிர்கள் செழித்தன, உயிரினங்கள் வாழ்வு பெற்றன. பிறகு வலிமையின் கடவுள் ''அமெ-னோ-தசிகராவோ'' தன் பலத்தால் குகையை நிரந்தரமாக மூடிவிட்டார். பிறகு அமதெரசு மீண்டும் விண்ணுலகம் சென்று தன் பணியைத் தொடர்ந்தார்.
சுசானவோ, அமதெரசுவுடன் ஏற்பட்ட சண்டையை மறந்து சமாதானமாகினார். அதற்கு அடையாளமாக ''குசநகி-நோ-சுருகி'' என்ற வாளை அமதெரசுவிற்கு உடன்பாடு பரிசாக அளித்தார்.
"https://ta.wikipedia.org/wiki/அமதெரசு" இலிருந்து மீள்விக்கப்பட்டது