[[படிமம்:Kasivisvanatha temple at Pattadakal.jpg|thumb|left|பட்டடக்கல்லில் உள்ள காசி விசுவநாதர் கோயில்]]
ஐகோல்ஐகொளெ கட்டிடக்கலையில் ஒரு பள்ளி என்றால், பாதமிபாதாமி ஒரு கட்டிடக்கலைக் கல்லூரியாகவும், பட்டடக்கல்லை ஒரு கட்டிடக்கலைப் பல்கலைக் கழகமாகவும் கருதலாம். சாளுக்கியர் பாணி ஐகோலில்ஐகொளெயில் (கிபி 450) உருவாகியது. அக்காலத்துச் சிற்பிகள் பல்வேறு கட்டிடக்கலைப் பாணிகளை வைத்துச் சோதனையில் ஈடுபட்டனர். அவர்கள் நாகரப் பாணியையும், திராவிடப் பாணியையும் கலந்து இன்னொரு தனித்துவமான பாணியை உருவாக்கினர். ஏழாம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் கோயில் கட்டும் நடவடிக்கைகள் பாதமியில்பாதாமியில் இருந்து பட்டடக்கல்லுக்கு மாறின.