இல்லறவியல் (திருக்குறள்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎இல்வாழ்க்கை: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
→‎வாழ்க்கை துணைநலம்: Contents moved to Wikibooks. Pls develop an article reg this topic here.
வரிசை 7:
இல்வாழ்க்கை
 
===வாழ்க்கை துணைநலம்===
----
:'''51. மனைத்தக்க மாண்புடையள் ஆகித்தற் கொண்டான்'''
::'''வளத்தக்காள் வாழ்க்கைத் துணை.'''
::*இல்லறத்திற்குரிய பண்புகளுடன், பொருள் வளத்துக்குத் தக்கவாறு குடும்பம் நடத்துபவள், கணவனின் வாழ்வுக்குப் பெருந்துணையாவாள்.
 
:'''52. மனைமாட்சி இல்லாள்கண் இல்லாயின் வாழ்க்கை'''
::'''எனைமாட்சித் தாயினும் இல்.'''
::*நற்பண்புள்ள மனைவி அமையாத இல்வாழ்க்கை எவ்வளவு சிறப்புடையதாக இருந்தாலும் அதற்குத் தனிச்சிறப்பு கிடையாது.
 
:'''53. இல்லதென் இல்லவள் மாண்பானால் உள்ளதென்'''
::'''இல்லவள் மாணாக் கடை.'''
::*நல்ல பண்புடைய மனைவி அமைந்த வாழ்க்கையில் எல்லாம் இருக்கும். அப்படியொரு மனைவி அமையாத வாழ்க்கையில் எதுவுமே இருக்காது.
 
:'''54. பெண்ணின் பெருந்தக்க யாவுள கற்பென்னும்'''
::'''திண்மைஉண் டாகப் பெறின்.'''
::*கற்பென்னும் திண்மை கொண்ட பெண்மையின் உறுதி பண்மைப் பெற்றுவிட்டால், அதைவிடப் பெருமைக்குரியது வேறு யாது?.
 
:'''55. தெய்வம் தொழாஅள் கொழுநன் தொழுதெழுவாள்'''
::'''பெய்யெனப் பெய்யும் மழை.'''
::*கணவன் வாக்கினை கடவுள் வாக்கினை விட மேலானதாகக் கருதி அவனையே தொழுதிடும் மனைவி பெய் என ஆணையிட்டவுடன் அஞ்சி நடுங்கிப் பெய்கின்ற மழையைப் பொலத் தன்னை அடிமையாக எண்ணிக் கொள்பவளாவாள்.
 
:'''56. தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற'''
::'''சொற்காத்துச் சோர்விலாள் பெண்.'''
::*கற்புநெறியில் தன்னையும் தன் கணவனையும் காத்துக் கொண்டு, தமக்குப் பெருமை சேர்க்கும் புகழையும் காப்பாற்றிக் கொள்வதில் உறுதி குலையாமல் இருப்பவள் பெண்.
 
:'''57. சிறைகாக்கும் காப்பவென் செய்யும் மகளிர்'''
::'''நிறைகாக்கும் காப்பே தலை.'''
::*தம்மை தாமே காத்துக்கொண்டு சிறந்த பண்புடன் வாழும் மகளிரை அடிமைகளாக நடத்த எண்ணுவது அறியாமையாகும்.
 
:'''58. பெற்றாற் பெறின்பெறுவர் பெண்டிர் பெருஞ்சிறப்புப்'''
::'''புத்தேளிர் வாழும் உலகு.'''
::*நற்பண்பு பெற்றவனைக் கணவனாகப் பெற்றால், பெண்டிர்க்கு இல்வாழ்க்கையெனும் புதிய உலகம் பெருஞ் சிறப்பாக அமையும்.
 
:'''59. புகழ்புரிந்த இல்லிலோர்க்கு இல்லை இகழ்வார்முன்'''
::'''ஏறுபோல் பீடு நடை.'''
::*புகழுக்குரிய இல்வாழ்க்கை அமையாதவர்கள், தம்மைப் பழித்துப் பேசுவோர் முன்பு தலைநிமிர்ந்து நடக்க முடியாமல் குன்றிப் போய் விடுவார்கள்.
 
:'''60. மங்கலம் என்ப மனைமாட்சி மற்றுஅதன்'''
::'''நன்கலம் நன்மக்கட் பேறு.'''
::*குடும்பத்தின் பண்பாடுதான் இல்வாழ்க்கையின் சிறப்பு; அதற்கு மேலும் சிறப்பு நல்ல பிள்ளைகளை பெற்றிருப்பது.
 
===புதல்வரை பெருதல்===
"https://ta.wikipedia.org/wiki/இல்லறவியல்_(திருக்குறள்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது