சோம பானம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி எஸ். பி. கிருஷ்ணமூர்த்திஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
தொடர்ந்து
வரிசை 8:
 
==சிறப்புகள்==
சோமபானம் தெய்வபூசைக்கு மிக முக்கியமான பூசைப் பொருள் ஆகும். இந்திரன், அக்னி, வருணன் போன்ற தேவர்களை சோமபானத்தை பருக வேண்டினர். சோமபானத்தை தேவர்களுக்கு படைத்த பின்பு தான் தாம் பருகுவர். தமது தேவர்களை மகிழ்விக்க சோமபானம் வலிமையான ஒன்று. சோமயாகத்தின் போது சோம பானத்தை பருக சிறப்பு விதிகள் உண்டு. மாலை வேளைகளில் அரசர்களும், அரசப்பிரதானிகளும் சோமபானம் அருந்துவர். போரின்போது படைத்தலைவர்கள், அணித்தலைவர்கள் சோம பானம் அருந்தி போர் செய்வார்கள். சோமத்தில் பாலும் தேனும் கலந்து ’சோமரசம்’ தயாரிக்கப்படுகிறது. வேதனையை மறக்கும், உடலுக்கு புத்துணர்ச்சி உண்டாக்கும். அதனால் முனிவர்கள் வேள்விகளின் போதும், படைத்தலைவர்கள், வீரர்கள் போரின் போதும் உடல் தளர்ச்சி அடையாமல் தொடந்துதொடர்ந்து சுறுசுறுப்பாகவும், மனவுறுதியுடன் செயல்பட உதவுகிறது. மேலும் உடலுக்கு குளிர்ச்சி தருவதுடன், நரம்புகளுக்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
 
ரிக்வேத கால முனிவர்கள் சோமபானத்தை பலவாறு சிறப்பித்து மந்திரங்கள இயற்றியுள்ளனர். கண்வ முனிவரின் மகன் குசூதி என்ற முனிவர் இந்திரனுக்கு விருப்பமான சோம பானத்தைக் குறிப்பிடுகிறார் (ரிக்வேதம் 8-71-7 & 8). சோமத்தை பற்றி அதிக சூக்தங்கள் செய்தவர் காசியப அசித் தேவல் (ரிக்வேதம் 9-5-1). சோமம் குறித்த துதிப்பாடல்கள் மூன்று பாதங்கள் கொண்ட காயத்ரி சந்தத்தில்தான் உள்ளது. ரிக்வேதம் 9வது மண்டலத்தில் 114 சூக்தங்களில் சோமத்தின் பெருமை பாடப்பட்டுள்ளது.
"https://ta.wikipedia.org/wiki/சோம_பானம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது