எழுத்து முறை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
(edited with ProveIt)
வரிசை 66:
==தமிழ் எழுத்துமுறை==
 
===பிராமி எழுத்து===
தமிழ் பிராமி எழுத்துமுறையானது பழந்தமிழை முதன் முதலாக எழுத பயன்படுத்தபட்ட பண்டைய எழுத்துமுறை ஆகும். இது இந்திய அளவிலான பிராமி எழுத்துமுறையின் தமிழ்மொழிக்கான தழுவலாக அமைந்திருந்தது. இரண்டாயிரம் ஆண்டுகளுக்குமுன், தமிழ்-பிராமி எழுத்துக்களிலேயே தமிழ் மொழி எழுதப்பட்டு வந்தது. இதனைப் பழங்காலக் கல்வெட்டுகள் மூலமாக அறியமுடியும். நான்காம் நூற்றாண்டு வரையிலும் தமிழ்-பிராமி எழுத்துமுறை வழக்கத்தில் இருந்தது. பின்னர் ஐந்தாம் நூற்றாண்டளவில், இது வட்டெழுத்தாக உருமாற்றம் அடைந்தது.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=http://www.virtualvinodh.com/wp/category/blog-tamil/ta-writingsystems/&ved=0ahUKEwiU76L21snUAhXIOJQKHSV-DX8QFggtMAQ&usg=AFQjCNFeNOXJc8CvEtiCXJH4fLO1IeprLA&sig2=_VON3-mK9j8R5x-BhebuhQ">{{cite web | url=http://www.virtualvinodh.com/wp/ | title=எழுத்துமுறை | accessdate=19 சூன் 2017}}</ref>
 
===வட்டெழுத்து===
பனை ஓலைச்சுவடிகளில் எழுதுவதற்கு ஏதுவாகத் தமிழ் பிராமி எழுத்துமுறையானது வட்டெழுத்து முறையாக உருமாறத் தொடங்கியது. வட்ட வடிவில் எழுதப்படும் தமிழ் எழுத்து வட்டெழுத்து என வழங்கப்பட்டது. தமிழில் வட்டெழுத்துகள் உருவான அதே கால கட்டத்தில், வடமொழியின் பிராமி எழுத்துமுறையில் பல்லவ கிரந்தம் என்ற புதிய எழுத்துமுறை பல்லவர் காலத்தில் உருவானது. தமிழ் வட்டெழுத்தும் பல்லவ கிரந்தமும் ஒருசேர வளர்ச்சி பெறத் தொடங்கின.
ஐந்தாம் நூற்றாண்டிலிருந்து பதினோராம் நூற்றாண்டு வரை தமிழ் மொழியில் இந்த வட்டெழுத்து பயன்படுத்தப்பட்டது. இது சற்றேறக்குறைய ஏழாம் நூற்றாண்டு வரை தொடர்ந்தது. அதன் பின்னர், தமிழ் வட்டெழுத்து முறையின் பயன்பாடுகள் படிப்படியாகக் குறையத் தொடங்கின. பிறகு, நவீன தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சியில், பல்லவத் தமிழ் எழுத்துமுறை உருவாகியது. இருப்பினும், 11 ஆம் நூற்றாண்டு வரை தமிழில் வட்டெழுத்து பயன்பாட்டில் இருந்து வந்தது. ஆனாலும், கேரளத்தின் மலையாள மொழியில் இவ் வட்டெழுத்து முறையானது பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை பயன்படுத்தப்பட்டு வந்தது. வட்டெழுத்து முறையின் மற்றுமொரு எழுத்து வடிவமாகத் திகழ்ந்த கோலெழுத்து முறையானது, மலையாள மொழியில் நீண்ட காலம் வழக்கில் இருந்து வந்தது.
வட்டெழுத்தில் புள்ளியின் பயன்பாடுகள் மிகுதியாகக் காணப்படும். இதன்விளைவாக, எகரம் மற்றும் ஒகரம் ஆகியவை தெளிவாக எழுதப்பெறும். இவற்றில் பகர, வகர வேறுபாடுகளைத் தெளிவாக வட்டெழுத்தில் அறிய முடியாதது ஒரு பெருங்குறையாகும். ஏனெனில், தமிழ் வட்டெழுத்து முறையில் இவை இரண்டும் வேறுபாடுகள் அறியவியலாத வகையில் ஒத்த வடிவங்களைக் கொண்டதாக அமைந்து காணப்படும்.<ref name="https://www.google.co.in/url?sa=t&source=web&rct=j&url=https://groups.google.com/forum/m/%23!msg/mintamil/C7w4WVfjMk8/xk6P2Qn9QbYJ&ved=0ahUKEwjMn8i95NDUAhUGv48KHS2UBqo4ChAWCBswAA&usg=AFQjCNF4ZuCA79SeCltd8kBIzArzeBbKsQ">{{cite web | url=http://virtualvinodh.com/ta-sanskrit/190-tamil-script-evolution | title=தமிழ் எழுத்துக்களின் பரிணாம வளர்ச்சி | accessdate=22 சூன் 2017}}</ref>
 
== வெளி இணைப்புகள் ==
"https://ta.wikipedia.org/wiki/எழுத்து_முறை" இலிருந்து மீள்விக்கப்பட்டது