சில புராணங்கள், பாற்கடலைத் தேவாசுரர் கடைந்தபோது சாம்பவானும்ம்சாம்பவானும் அதில் உதவியதாகவும், திருமாலின் [[வாமனர்|வாமன அவதாரத்தில்]] அவரை ஏழு தடவைகள் சுற்றிவந்தவராகவும் கூறுகின்றன.<ref name=dict>Patricia Turner, Charles Russell Coulter. ''Dictionary of ancient deities''. 2001, page 248</ref> இராமாயணத்தில், தான் யாரென்பதை மறந்திருந்த [[அனுமன்|அனுமனுக்கு]] அவர்தம் மெய்யாற்றலை நினைவூட்டி, அவர் இலஙகைஇலங்கைக்குச் சென்று சீதையைக் கண்டுவரும் பெருஞ்செயலுக்கு உதவியவராக சாம்பவான் சுட்டிக்காட்டப்படுகின்றார். மேலும்,, இராம-இராவண யுத்தத்தில் [[இந்திரசித்து]]]வால் [[இலக்குவன்]] மயக்கமுற்ற போது, அரிய மூ்லிகையைஇமூ்லிகையை அனுமன் கொணர்ந்து இலக்குவன் உயிர்த்தெழக் காரணமானார். [[மகாபாரதம்|மகாபாரதத்திலோ]] சியமந்தகமணிக்காக [[கண்ணன்|கண்ணனுடன்]] மோதித் தோல்வியுற்று, பின் தன் மகள் [[ஜாம்பவதி]]யையும் சியமந்தக மணியையும் அவருக்்கே ஒப்படைப்பவராக, சாம்பவான் வலம் வருகின்றார்.மாபெரும் பலசாலியாக சாம்பவான் மிளிர்ந்திருக்கின்றார். இன்றும் குறித்த துறைகளில் முறியடிக்க முடியாத பெரும்பலம்வாய்ந்தவர்களை "ஜாம்பவான்" என்று புகழ்வது பெருவழக்காக இருக்கின்றது.