அந்திமந்தாரை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 2:
==அந்தி மந்தாரை==
 
அந்தியில் மலர்வதால் இது அந்தி மந்தாரை அல்லது அந்திமல்லி, பெருவின்[[பெரு]]வின் அதிசயம் ((Marvel of Peru )இது நான்கு மணித்தாவரம் ( Four O’ Clock Plant) என்ற பெயர்களால் அழைக்கப்படுகின்றது. இதற்குத் தாவரவியலில் மிராபிலிஸ் ஜலாபா (Mirabilis jalapa Linn ) என்று பெயர் ‘மிராபிலிஜஸ்’ என்ற இலத்தீன் சொல்லுக்கு ‘அற்புதமான’ என்று பொருள். ‘ஜலாபா’ என்ற சிற்றின அடைமொழி (Specific epith ) இதன் வேர்க்கிழங்கிலிருந்து கிடைக்கும் பேதி மருந்தைக் குறிப்பதாகும். இது ஒரு பூவிதழ் வட்டமுடைய (Monochlamydeae ) இருவிதையிலைக் குடும்பங்களில் ஒன்றான நிக்டாஜினெசியைச் ( Nyctaginaceae) சார்ந்தது, இதன் தாயகம் [[தென் அமெரிக்கா]] என்று கூறப்படுகின்றது.
 
==சிறப்புப்பண்புகள்==
 
இது நிமிர்ந்து வளரும் பலபருவக் குறுஞ்செடி அல்லது சிறு புதர்செடிகயாகும். இது 60-90 செ.மீ உயரம் வரை வளரக் கூடியது: விரைவில் வளரும் தன்மை உடையது. இதற்கு நில அடிக்கிழங்கு (Tuber ) உண்டு. கிழங்கு ஏறக்குறைய 10 செ.மீ. விட்டத்தையடையும். இதிலிருந்து புதுச்செடிகள் தோன்றும். இதன் கணுக்கள் (Nodes ) பருத்திருக்கும். இலைகள் முட்டை (Ovate ) அல்லது ஈட்டிவடிவிலும் ( Lanceolate )இ கூரிய நுனி அல்லது நீள் கூரிய நுனியோடும் (Acute or Acuminate) இருக்கும்: ஏறக்குறைய 12 செ.மீ. நீளமுடையவை. பூக்கள் கொத்துக்களாக, வெள்ளை, சிவப்பு, மஞ்சள் வண்ணங்களிலும், வரிகளுடனும், புள்ளிகளுடனும் அல்லது இவை இல்லாமலும் காணப்படும். இவை மாலையில் மலர்ந்து காலையில் மூடிக்கொள்ளும், அல்லி இதழ்கள் கிடையா. இவற்றின் வண்ணமிகு அழகிய பகுதி புல்லி வட்டமாகும்.
 
==பொருளாதாரச் சிறப்பு==
 
இதன் வேர்க்கிழங்குகளுக்குப் பேதி உண்டாக்கும் தன்மை சிறிதளவு உண்டு. வேர்த்தூளுக்கு; (Powder ) குறிப்பிட்ட மணமும், உவர்ப்பு அல்லது கசப்புத் தன்மையும் உண்டு. இது உணர்ச்சியைக் குறைக்கக்கூடியது: உமிழ்நீரைச் சுரக்கச் செய்யும். இதன் ஈரமான தூள் தோலையும், மூக்கு சவ்வையும் (Mucous membrane ) பாதிக்கும். சீனா நாட்டில் இதன் இலை, தண்டுகளைப் பன்றிக் கறியுடன் சேர்த்துச் சமைத்துச் சாப்பிடுவார்கள். விதைகள் என்று கூறப்படுகின்ற கனிகள் மிளகுடன் கலப்படம் செய்தவற்குப் பயன்படுத்தப்படுகின்றன. கட்டிகளும் கொப்புளங்களுக்கும் இதன் இலைகள் பற்றாகப் (Poultice ) பயன்படுத்தப்படுகின்றன. இதன் இலைச்சாறு காயம், புண், நமைச்சல் ஆகியவற்றைப் போக்குவதற்கு மருந்தாகப் பயன்படுகின்றது. இது அழகு தரும் செடியாகவும் வளர்க்கப்படுகின்றது: மரபியல் ஆராய்ச்சிகளில் பயன்படுகின்றது.
==நூலோதி==
 
"https://ta.wikipedia.org/wiki/அந்திமந்தாரை" இலிருந்து மீள்விக்கப்பட்டது