மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 22:
== பிறப்பு மற்றும் கல்வி ==
இவர் 1483 ஆம் ஆண்டில் செருமனியில் உள்ள ஐஸ்லிபென் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையார் ஹான்ஸ் லுாதர் ஆவார். இவரின் தாயார் மார்க்ரெட்டா ஆவார். மார்ட்டின் லுாதரின் தந்தையார் ஒரு வணிகர் ஆவார். மார்ட்டின் லுாதர் சிறுவனாக இருக்கும் போதே லுாதரின் குடும்பம் மான்ஸ்பெல்டுக்கு இடம் பெயர்ந்தது.<ref>{{cite web | url=http://www.history.com/topics/martin-luther-and-the-95-theses | title=Martin Luther and the 95 Theses | publisher=History.com | accessdate=15 அக்டோபர் 2017}}</ref> மார்ட்டின் லூதர் பல சகோதர, சகோதரிகளைக் கொண்டிருந்தார். அவர்களில் சேக்கப் என்பவர் மார்ட்டின் லுாதருக்கு நெருக்கமானவராக இருந்தார். <ref name=Marty3>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 3.</ref> 1501 ஆம் ஆண்டில் தனது 17 ஆம் வயதில், மார்ட்டின் லூதர் எர்ஃபர்ட் பல்கலைக்கழகத்தில் நுழைந்தார். இவர் பின்னாளில் இந்தப் பல்கலைக்கழகத்தை பீர் இல்லம் என்றும் விபச்சார விடுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.<ref name=Marty4>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 4.</ref> அவர் அங்கிருந்த கால கட்டத்தில் ஒவ்வொரு நாளும் அதிகாலை நான்கு மணிக்கு துாக்கத்திலிருந்து எழுப்பப்பட்டார். இவ்வாறான நாட்களை அவர் "குருட்டு மனப்பாடம் செய்து கற்பதற்காகவும், சலித்துப்போகச்செய்யும் ஆன்மீகப் பயிற்சிகளைச் செய்வதற்காகவும் செலவழிக்கப்பட்ட நாட்கள்” என்று குறிப்பிடுகிறார்."<ref name=Marty4/> 1505 ஆம் ஆண்டு தனது முதுகலைப் பட்டத்தைப் பெற்றார்.<ref name=Marty5>[[Martin E. Marty|Marty, Martin]]. ''Martin Luther''. Viking Penguin, 2004, p. 5.</ref> தமது தந்தையின் வற்புறுத்தலின் காரணமாகச் சிறிது காலம் சட்டம் பயின்றார். ஆனால் சட்டக்கல்வியை இவர் முடிக்கவில்லை.<ref name=RuppEB>[[Gordon Rupp|Rupp, Ernst Gordon]]. "Martin Luther," ''Encyclopædia Britannica'', accessed 2006.</ref> மாறாக, புனித அகஸ்டினியனைப் பின்பற்றும் கிறித்தவத் துறவியாக ஆனார். இவர் 1512 ஆம் ஆண்டில் ”டாக்டர்” பட்டம் பெற்றார்.<ref>{{cite book | title=The 100 | publisher=Kensington Publishing Corporation | author=Michael H. Hart | year=1992 | location=New York | pages=123 | isbn=0-8065-1350-0}}</ref>
 
== துறவியாக மாறுதல் ==
1505 ஆம் ஆண்டில் லுாதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லுாதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் ஒரு துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லுாதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லுாதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லுாதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது. <ref>{{cite web | url=https://www.biography.com/people/martin-luther-9389283 | title=Martin Luther | publisher=Biography.com | accessdate=21 அக்டோபர் 2017}}</ref>
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது