மார்ட்டின் லூதர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 25:
== துறவியாக மாறுதல் ==
1505 ஆம் ஆண்டில் லுாதர் தனது வாழ்வையே மாற்றியமைக்கும், துறவு வாழ்க்கை எனும் புதிய பயணத்தைத் தொடங்கப்போகும் ஒரு அனுபவத்தை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. அவர் ஒரு கடுமையான இடி, மின்னல், புயலுடன் கூடிய மழையொன்றில் சிக்கிக்கொண்டார். அந்த நேரத்தில் தனது வாழ்வு குறித்த பயம் அவருக்கு ஏற்பட்டது. லுாதர் புனித ஆன் அன்னையிடம் ”புனித ஆனே என்னைக் காப்பாற்று, நான் ஒரு துறவுபூண்டு விடுகிறேன்” என்று அழுது வேண்டினார். புயல் அடங்கி அமைதி நிலை ஏற்பட்டது. லுாதரின் வாழ்வு காப்பாற்றப்பட்டது. பல வரலாற்றாசிரியர்கள் இது தன்னிச்சையாக நடந்த சம்பவம் அல்ல என்றும், இது லுாதரின் மனத்தில் முன்னதாகவே இருந்த எண்ணத்தின் விளைவு தான் என்றும் நம்புகின்றனர். இந்த முடிவானது மிகவும் கடினமானதாகவும், மார்ட்டின் லுாதரின் தந்தைக்கு ஏமாற்றம் அளிப்பதாகவும் அமைந்தது. <ref>{{cite web | url=https://www.biography.com/people/martin-luther-9389283 | title=Martin Luther | publisher=Biography.com | accessdate=21 அக்டோபர் 2017}}</ref>
 
== ஞானமடைதல் மற்றும் சீர்திருத்த முயற்சிகள் ==
 
லூதர் தேடிய இறையுணர்வு சார்ந்த ஞானம் கிடைக்கப்பெறாத காரணத்தால் துறவிகளுக்குரிய வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகள் கடினமானதாக இருந்தது. குரு ஒருவர் முதலில் ஞானத்தைத் தேடாமல் கிறித்துவையே தனது வாழ்நாளின் குறிக்கோளாகக் கொள்ளுமாறும், கிறித்துவானவர் அவர் தேடும் ஞானத்திற்கான வழியாக இருப்பார் என்றும் கூறி ஆற்றுப்படுத்தினார்.
இறுதியாக, மதம் சார்ந்த இலக்கியங்களை ஆய்ந்த படித்ததன் காரணமாக மார்ட்டின் லூதர் இறையுணர்வு சார்ந்த முழுமை நிலை அல்லது ஞானத்தைப் பெற்றார். 1513 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், பிரசங்கத்திற்கான உரையைத் தயாரித்துக் கொண்டிருந்த போது, கிறித்துவானவர் தான் சிலுவையிலறையப்படும் போது கருணையை வேண்டிய அவரது இறைஞ்சுதலை வெளிப்படுத்தும் சங்கீதம் 22இன் முதல் வரியை வாசித்த போது இறை மற்றும் மதம் குறித்த தனது இறைஞ்சுதலுடன் அது ஒத்துப்போவதை உணர்ந்தார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு உரோமானியர்களுக்காக புனித பவுலினால் எழுதப்பட்ட வழிபாட்டுக்கான சங்கீதப் பாடலைப் பற்றிய பிரசங்கத்திற்காக தயாரித்துக் கொண்டிருந்த போது அவர் ”விசுவாசம் மட்டுமே வாழ்வாகிறது” என்ற வரியை வாசித்தார். இந்த வரிகளை ஆழமாக வாசித்துக் கொண்டிருந்த போது, அவர் கடவுள் மீதான பயம் அல்லது மத போதனை மூலமாக அடிமைப்படுத்தப்படுதலின் மூலமாகவோ யாரும் ஆவிக்குரிய இரட்சிப்பானது நிகழாது என்பதை உணர்ந்தார். இறை மீதான நம்பிக்கை மட்டுமே ஆவிக்கான இரட்சிப்பிற்கான வழியாகும் என்று உணர்ந்தார். இந்தக் காலகட்டமே லூதரின் வாழ்வில் சீர்திருத்தத்தை நோக்கிய நகர்விற்கு வழிவகுத்த காலகட்டமாகக் குறிப்பிடப்படுகிறது.<ref>{{cite web | url=https://www.biography.com/people/martin-luther-9389283 | title=Martin Luther | publisher=Biography.com | accessdate=21 அக்டோபர் 2017}}</ref>
 
== விவிலிய மொழிபெயர்ப்பு ==
"https://ta.wikipedia.org/wiki/மார்ட்டின்_லூதர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது