தேவநேயப் பாவாணர்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Kanagsஆல் செய்யப்பட்ட கடைசித் தொகுப்புக்கு முன்நிலையாக்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎பிறப்பு: space before (
வரிசை 37:
==வாழ்க்கை வரலாறு==
===பிறப்பு===
பாவாணர் [[1902]] ஆம் ஆண்டு [[பெப்ரவரி 7]] ஆம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 6 மணிக்கு ஞானமுத்து என்னும் கணக்காயருக்கும், பரிபூரணம் அம்மையார் என்னும் கணக்காய்ச்சியருக்கும் பத்தாவது மகவாகவும் நான்காவது மகனாகவும் பிறந்ததாகத் [[திருநெல்வேலி]] மாவட்டத்தில் உள்ள சங்கர நயினார் கோவிலில் ([[சங்கரன்கோவில்]]) பதிவு செய்யப்பட்டுள்ளது. தேவநேயரின் தந்தையார் ஞானமுத்து தோக்கசுவை (Stokes)[[கிறித்தவம்|கிறித்தவ]] மத குருவானவர் ஒருவர் எடுத்து வளர்த்து வந்துள்ளார் . ஞானமுத்து தோக்கசுவின் பெற்றோர் முத்துசாமி , திருவாட்டி. வள்ளியம்மாள் இருவரும் தோக்கசு அவர்களின் மாளிகையில் காவலர்களாகப் பணியாற்றி வந்துள்ளனர். அவர்களைக் கிறித்துவர்களாக்கி தம் பெயரையும் சூட்டி உள்ளார். முத்துசாமி தஞ்சாவூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்தவர்.<ref>பாவாணரின் மொழியாராய்ச்சிக் கட்டுரைகள் நூல் - xvii</ref> [[1906]] - பாவாணரின் தந்தையாரும் அன்னையாரும் அடுத்தடுத்து இயற்கை எய்தினர். சங்கரநயினார் கோயில் வட்டம் வட எல்லையாகிய சீயோன்மலை என்னும் முறம்பில் 'யங்' துரை என்பார் காப்பில் தேவநேயப் பாவாணர் தொடக்கக் கல்வி பயின்றார்.
 
===படிப்பும், பணிகளும்===
வரிசை 44:
*[[1912]] - தம் ஐந்தாம் அகவையில் பெற்றோரை இழந்தப் பாவாணர், [[வட ஆற்காடு மாவட்டம்|வட ஆர்க்காடு மாவட்டம்]], [[ஆம்பூர்|ஆம்பூரில்]] மூத்த அக்காளான பாக்கியத்தாயின் பேணலில் வளர்ந்தார். [[சோழபுரம்]] விடையூழியப் பள்ளியில் [[தொடக்கப் பள்ளி (தமிழ்நாடு)|தொடக்கக் கல்வியும்]], ஆம்பூரில் உள்ள மிசௌரி உலுத்தரின் விடையூழிய (M.E.L.M.) நடுநிலைப் பள்ளியில், எட்டாம் வகுப்பு வரை படிப்பைத் தொடர்ந்தார்.
*[[1916]] - [[பாளையங்கோட்டை]]த் திருச்சபை விடையூழியக் கழக [[உயர்நிலைப்பள்ளி (தமிழ்நாடு)|உயர்நிலைப்பள்ளி]]யில்(C.M.S.) IV, V, VI ஆம் படிவங்கள் (இந்நாளில் 9, 10, 11 ஆகிய வகுப்புகள்) பயின்றார்.
*[[1919]] - [[இராமநாதபுரம் மாவட்டம்]] முறம்பு என்னும் சீயோன் மலையில் உயர்தரப்பள்ளி ஒன்றை உருவாக்கி அதன் தாளாளராக இருந்த யங் என்பவர் பணவுதவி செய்தார்; பின்பு தன் 17ம் அகவையில், 1919 ஆண்டு தாம் பயின்ற சீயோன் மலை உயர்தரப்பள்ளியிலேயே முதல் படிவ (ஆறாம் வகுப்பு) ஆசிரியராக இரண்டு ஆண்டுகள் பணியாற்றினார்.
* [[1921]] - ஆம்பூர் உயர்நிலைப்பள்ளியில் உதவித் தமிழாசிரியராகப் பணிவுயர்வு பெற்றார். (3 ஆண்டுகள்).
* [[1924]] - மதுரைத் தமிழ்ச்சங்கப் பண்டிதத்தேர்வில் அவ் ஆண்டுஅவ்வாண்டு தேர்ச்சி பெற்ற ஒரேயொருவர் தேவநேயர் என்ற சிறப்பும் பெற்றார்.'ஞா.தேவநேசக் கவிவாணன், மிசன் உயர்தரப் பாடசாலை, ஆம்பூர்,வடார்க்காடு ஜில்லா <small>([[மாவட்டம்]])</small>' என்பது தேர்ச்சிக் குறிப்பு (செந்தமிழ் தொகுதி 22)
** [[சென்னை]] வருகை; [[பெரம்பூர்|பிரம்பூர்]] கலவல கண்ணன் செட்டி உயர்நிலைப்பள்ளி.
*[[1925]] - சென்னை, [[திருவல்லிக்கேணி]] கெல்லற்று உயர்நிலைப்பள்ளி.
*[[1926]] - சென்னை, [[தாம்பரம்]] கிறித்தவ உயர்நிலைப்பள்ளி (மூன்றாண்டு)
** [[திருநெல்வேலி]] தென்னிந்திய தமிழ்ச்சங்கத் தனித்தமிழ்ப் புலவர் தேர்வில் அவ்வாண்டு தேர்ச்சியடைந்த ஒரேயொருவர் தேவநேயரே. (செந்.செல்.4:336);
** சென்னைப் பல்கலைக்கழக வித்துவான், கீ.க. தேர்வு (B.O.L) என்னும் இளநிலைத் தேர்விலும் வெற்றி பெற்றார்;
**எசுந்தர் அம்மையார் திருமணம்.ஈராண்டில் இயற்கை. ஒரு குழந்தை மணவாளன்; தத்தாகத் தரப்படுதல்.
*[[1929]] [[மன்னார்குடி]]ப் பின்லேக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் ஆறாண்டு பணி; இக்காலகட்டத்தில், இராசகோபாலர் என்பவரிடம் முறையாக இசை பயின்றார்.
*[[1930]] தேவநேயர்-நேசமணியார் [[திருமணம்]].
வரிசை 60:
*[[1936]] - இடுநூல் சென்னைப் பல்கலைக்கழகத்தால் தள்ளப்படுதல். 'இனி எனது நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக வெளியிடுவேன்' என உறுதிக் கொள்ளல்.
*1940 - ஒப்பியன் மொழிநூலை வெளியிட்டார்.<ref>இந்திய இலக்கியச் சிற்பிகள் - இரா. இளங்குமரன் - [[சாகித்திய அகாதமி விருது பெற்ற தமிழ்ப் புத்தகங்கள்|சாகித்திய அக்காதெமி]] 2002, 2007 - பக். 17லிருந்து</ref>
*[[1943]] - சென்னை முத்தியாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளி (ஓராண்டு). தமிழ் உணர்ச்சி மாநாட்டில் பங்கேற்பு (21.10.43). [[தொல்காப்பியம்|தொல்காப்பிய]]க் குறிப்புரை வரைவு.
*[[1944]] - [[சேலம்]] நகராண்மைக் கல்லூரியில் தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் (பன்னீராண்டு) ஏந்தாக வாழ்தல்.
*[[1947]] - பெரியார் வெள்ளிப் பட்டயம் வழங்கிப் பாராட்டல்.
*[[1952]] - தமிழ் முதுகலைப் பட்டம் (M.A.) பெறுதல்.
 
===நாள் அடைவு===
வரிசை 69:
*24.09.[[1961]] - காட்டுப்பாடியில் வாழ்வு.
*27.10.[[1963]] - மனைவியார் நேசமணி அம்மையார் இயற்கை எய்துதல்.
*12.[[சனவரி|01]].[[1964]] - தமிழ்ப்பெருங்காவலர் விருது; தமிழ்க் காப்புக் கழகம், [[மதுரை]]
*06.[[அக்டோபர்|10]].[[1966]] - உ.த.க. தோற்றம்; திருச்சிராப்பள்ளி.
*08.[[செப்டம்பர்|09]].[[1967]] - [[மணி விழா]], மதுரை.
வரிசை 76:
*12.[[பிப்ரவரி|02]].[[1971]] - தென்மொழி, பாவாணர் அகரமுதலித் திட்டத் தொடக்கம்.
*05.05.[[1971]] - [[குன்றக்குடி அடிகளார்]] பாரி விழாவில் 'செந்தமிழ் ஞாயிறு' விருது வழங்குதல்
*31.12.[[1972]] - தமிழன் பிறந்தகம் குமரிநாடே என்னும் தீர்மானிப்பு மாநாடு, [[தஞ்சை]].
*08.[[மே|05]]. [[1974]] - [[செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி]]த் திட்ட [[செந்தமிழ் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்ககம்|இயக்குநராக]] அமர்த்தம்.
*15.01.[[1979]] - தமிழ்நாட்டு அரசு 'செந்தமிழ்ச் செல்வர்' விருது வழங்குதல்.
வரிசை 85:
 
==== இறுதி நாட்கள் ====
மதுரையில் நடைபெற்ற ஐந்தாம் உலகத் தமிழ் மாநாட்டில் பங்கேற்று, "மாந்தன் தோற்றமும், தமிழர் மரபும்" எனும் பொருளில் 75 நிமிடங்கள் உரையாற்றினார். அன்று (5.1.1981) இரவே உடல் நலங்கெட்டு அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டார். நோயிலிருந்து மீளாமலேயே 1981 சனவரி 1615 பின்னிரவு (அதிகாலை) ஒரு மணிக்கு இயற்கை எய்தினார்.
[[படிமம்:Devaneya Pavanar Stamp.jpg|thumb|தேவநேயப்பாவாணரின் படத்துடன் இந்தியா வெளியிட்ட [[அஞ்சல் தலை]] ]]
 
"https://ta.wikipedia.org/wiki/தேவநேயப்_பாவாணர்" இலிருந்து மீள்விக்கப்பட்டது