தமிழ்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
DrRom (பேச்சு | பங்களிப்புகள்)
Fixed typo
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு
வரிசை 170:
}}
 
[[படிமம்:Tanjavur Tamil Inscription2.jpg|thumb|[[தஞ்சாவூர்]] [[தஞ்சைப் பெருவுடையார் கோயில்|பெரிய உடையார் கோவில்]] (தஞ்சைப் பிரகதீசுவரர் கோயில்) -இல் உள்ள தமிழ் கல்வெட்டு. இது [[வட்டெழுத்து|வட்டெழுத்தில்]] உள்ளது. இது [[சோழப் பேரரசு|சோழசோழப் பேரரசின்]] காலத்தில் 1000 CE -இல் கட்டப்பட்டது.]]
''முதன்மைக் கட்டுரை: [[தமிழ் ஒலிப்புமுறை]]''
 
வரிசை 176:
 
=== உயிர் எழுத்துகள் ===
உயிரெழுத்துக்களில் குறுகிய ஓசையுடைய எழுத்துக்களான அ, இ, உ, எ, ஒ ஆகிய எழுத்துகள் குற்றெழுத்துக்கள் (குறில்) எனவும், நீண்ட ஓசையுடைய எழுத்துக்களான ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஔ ஆகிய எழுத்துகள் நெட்டெழுத்துக்கள் (நெடில்) எனவும் வழங்கப்படும்.
 
குறிலெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் ஒரு [[மாத்திரை (தமிழ் இலக்கணம்)|மாத்திரை]] நேரத்திலும், நெட்டெழுத்துக்கள் ஒவ்வொன்றையும் இரண்டு மாத்திரை நேரத்திலும் ஒலிக்க வேண்டும்.
வரிசை 255:
=== ஒலிப்பியல் ===
{{மேலும் பார்க்க|தமிழ் வட்டார மொழி வழக்குகள்}}
பெரும்பாலான [[இந்திய மொழிகள்|இந்திய மொழிகளைப்]] போலன்றி தமிழில் மூச்சைக்கொண்டு ஒலிக்கும் (''aspirated'') மெய்யெழுத்துக்கள் கிடையாது. பேச்சில் வழங்கி வரினும்வழங்கிவரினும், தமிழ் எழுத்து மிடற்றொலிகளையும் (''voiced sounds'') பிற ஒலிகளையும் வேறுபடுத்துவதில்லை. மிடற்றொலிகளும் அவற்றின் இனமான பிற ஒலிகளும் தமிழில் வகையொலிகள் (''allophones'') அல்ல. [[தமிழர்]] பொதுவாக இவ்வேறுபாட்டை உணர்ந்திருக்கின்றனர். மேலும், [[தொல்காப்பியம்|தொல்காப்பியத்தில்]] ஒரு எழுத்தை எப்பொழுது [[மிடறு|மிடற்றிலிருந்து]] ஒலிக்க வேண்டும் என்பது பற்றிய வரைமுறை விளக்கப்பட்டுள்ளது. எடுத்துக்காட்டாக, "க" எனும் மெய்யொலி மிடறு நீங்கிய நிலையில் (voiceless) 'k' ஒலியுடன் சொல்லின் முதலில் வரும்பொழுதும் (உ: கல்), பிற இடங்களில் ஒற்றிரட்டித்து (geminate) வரும்பொழுதும் (உ: அக்கா), அமைகிறது. "க" என்பது மிடற்றொலியாக (voiced) 'g' ஒலியுடன், தொல்காப்பிய விதிப்படி சொல்லின் முதலில் வராது, சொல்லின் உள்ளே வரும்: (உ: பூங்கா) தன் இன மூக்கொலியை (nasal) அடுத்து வரும்.
 
சொல்லின் முதலில் ''சகரம்'' எவ்வாறு ஒலிக்கப்பட வேண்டும் என்ற நெறியைத் தவிர பிற நெறிமுறைகள் செந்தமிழில் பொதுவாகப் பின்பற்றப்படுகின்றன. கொடுந்தமிழ் அல்லது வழக்குத்தமிழில் ஒவ்வொரு வட்டாரத்திற்கும் ஏற்ப ஒலிப்புமுறை வேறுபடுகிறது. தென்வட்டார வழக்குகளிலும் இலங்கை வழக்குகளிலும் இம்முறை பெரும்பாலும், ஆனால் முழுமையாகவல்லாமல்முழுமையாக அல்லாமல், பின்பற்றப்படுகிறது. வடபகுதி வட்டார வழக்குகளில் ஒலிப்பெயர்வு ஏற்பட்டு ஒலிப்புநெறிகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. இவைதவிர, [[சமஸ்கிருதம்]] மற்றும் பிற [[வடமொழி]]களிலிருந்து பெறப்பட்ட சொற்கள் தமிழில் பெரிதும் உள்ளபடியே பயன்படுத்தப்படுகின்றன.
 
தமிழ் எழுத்தில் ஏன் மிடற்றொலி மற்றும் பிறவொலி வேறுபாடுகள் இல்லையென்ற கேள்விக்கு [[ஒலிப்பியல்|ஒலிப்பியலாளர்கள்]] நடுவே ஒருமித்த கருத்து இல்லை. ஒரு சாரார் தமிழ் மொழியில் கூட்டுமெய்களும் மிடற்றினின்றொலிக்கும்மிடற்றினின்று ஒலிக்கும் வல்லெழுத்துக்களோ அடிப்படையில் இருந்ததில்லையென்றும், சொற்புணர்ச்சி மற்றும் குறுக்கத்தினால் மட்டுமே இவ்வொலிகள் ஏற்படுகின்றன என்று குறிப்பிடுகின்றனர். அதனால், [[இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பம்|இந்திய ஐரோப்பிய மொழிக்குடும்பத்தைச்]] சேர்ந்த மொழிகள் மற்றும் பிற [[திராவிட மொழிக் குடும்பம்|திராவிட]] மொழிகளைப் போலன்றி தமிழில் இவ்வொலிகளுக்கெனத் தனியெழுத்துக்கள் தேவைப்படவில்லை என்று கருதுகின்றனர். இக்கருத்திலிருந்து மாறுபட்டு மிடற்றொலிகள் அவற்றையொத்த பிற ஒலிகளின் வகையொலிகளாகவே தமிழில் இருந்துள்ளன என்றும் அதனாலேயே அவற்றிற்கெனத் தனியாக எழுத்துக்குறிகள் இல்லையெனவும் ஒரு கருத்தைச் சிலர் முன்வைக்கின்றனர்.
 
==== குறுக்கம் ====
"https://ta.wikipedia.org/wiki/தமிழ்" இலிருந்து மீள்விக்கப்பட்டது