திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோயில்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசிச் செயலியில் செய்யப்பட்ட தொகுப்பு Android app edit
வரிசை 152:
கி.பி 17 ஆம் நூற்றாண்டில் உமயம்ம ராணி எனும் ராணியின் ஆட்சிக்கால சமயம் முகில்கான் எனும் வெளிநாட்டினன் மணக்காடு எனும் பகுதியில் தங்கி இத்திருக்கோயிலைக் கொள்ளையடிக்க முயற்சி செய்தபொழுது, திருவனந்தபுரத்து முஸ்லீம்களால் தாக்கி விரட்டப்பட்டான். <ref>http://www.tamilvu.org/slet/l4100/l4100pd4.jsp?bookid=74&pno=448</ref>
 
இக்கோயிலில் 6 பாதாள ரகசிய அறைகள் உள்ளன. பாதாள அறைகள் பல நூற்றாண்டுகளாக திறக்கப்படாமல் இருப்பதால் அதைத் திறந்து பார்த்து உள்ளே என்ன இருக்கிறது என்பதைக் கண்டறிய வேண்டும் என்று கோரி சுந்தரராஜன் என்பவர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். உச்சநீதிமன்றம் இரு முன்னாள் நீதிபதிகள் அடங்கிய 7 பேர் குழுவை அமைத்து பாதாள அறைகளைத் திறந்து ஆய்வு நடத்த உத்தரவிட்டது <ref>http://thatstamil.oneindia.in/news/2011/07/03/1-lakh-cr-counting-treasur-hunt-padmanabhaswamy-temple-aid0091.html</ref> ஜூன் 27, 2011 அன்று ஆய்வு தொடங்கியது. சோதனையின்போது தங்கத்தாலான விஷ்ணு சிலை, விலை மதிக்கவே முடியாத அரிய வகை வைரங்கள், வைடூரியங்கள் கிடைத்தன. தூய தங்கத்தால் ஆன ஒரு கிலோ எடை கொண்ட 18 அடி நீளமுடைய நகைகளும், பைகள் நிறைய தங்க நாணயங்கள், அரிய வகை கற்கள் ஆகியவையும் கண்டுபிடிக்கப்பட்டன. இதன் மதிப்பு ஒரு லட்சம் கோடிக்கு மேல் இருக்கும் என கருதப்படுகிறது.கணக்கிடப்பட்டுள்ளது இந்த கோவிலின் கடைசி பாதாள அறையை இன்று வரை திறக்க முடியவில்லை அந்த அறையை திறந்தால் உலகம் அழிந்தூவிடும் எனவும் அதில் விஸ்ணுவின் சுதர்சன சக்கரம் உள்ளது எனவும் பல மர்மங்கள் உள்ளன <ref>http://articles.economictimes.indiatimes.com/2011-07-02/news/29730610_1_temple-chamber-precious-items</ref>
 
2012 ஆம் ஆண்டு இந்த செல்வ வளத்தை தேச நலனுக்குப் பயன்படுத்த வேண்டுமென கொச்சிப்பகுதியைச் சார்ந்த கிறித்துவர் ஜேக்கப் மாப்பிளசேரி பொது நல மனுச்செய்தார்.<ref>http://www.dinamalar.com/news_detail.asp?id=379297&Print=1</ref><ref name="கோயில்">குமுதம் ஜோதிடம்;27.01.2012; பக்கம் 1;</ref>