பந்தளம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
சிNo edit summary
வரிசை 23:
}}
'''பந்தளம்''' (Pandalam, പന്തളം) என்பது கேரளத்தில் [[பத்தனம் திட்டாபத்தனம்திட்டா மாவட்டம்|பத்தனம்திட்டபத்தனம்திட்டா ‎மாவட்டத்தில்]] உள்ள ஓர் நகரமாகும். இந்தியாவில் உள்ள ‎கேரளத்தில், மிகவும் விரைவாக வளர்ந்து வரும் நகரங்களில் ‎பந்தளம் ஒன்றாகும். அது ஒரு புனிதமான ஊராக மக்களால் ‎கருதப்படுகிறது. மத்திய திருவிதாங்கூறில் நிலை கொண்ட ‎பந்தளம் கல்வி மற்றும் உடல் நல மையங்களுக்கு பெயர் ‎போனதாகும்.தரம் வாய்ந்த பள்ளிக்கூடங்களில் இருந்து பட்டப் ‎படிப்பு, மேற்படிப்பு, பயிற்சி, ஆயுர்வேதம், பொறியியல் கல்லூரிகள் ‎போன்ற அனைத்து கல்வி நிலையங்களும் நிறுவனங்களும் இங்கு ‎அமையப்பெற்றுள்ளன.‎
 
== தலபுராணம் ==
வரிசை 32:
 
== வரலாறு ==
{{முதன்மை|பந்தளம் அரச மரபு}}
 
தமிழ் நாட்டை ஆண்டு வந்த பாண்டிய மன்னர்களில் சிலர் போரில் ‎தோல்வி அடைந்ததால் ஊரை விட்டு ஓடிவந்ததாகவும், இங்கே ‎இருந்த நில உரிமையாளர்களில் ஒருவரான கைப்புழா தம்பனிடம் ‎இருந்து இங்கு நிலம் வாங்கியதாகவும், ஐதீகங்கள் கூறுகின்றன. ‎மேற்கு மலைத்தொடர்களின் இரண்டு பக்கங்களிலும் இருந்த ‎ராஜ்ஜியங்கள் பாண்டிய அரசரின் ஆட்சியில் இருந்துவந்தது. ‎பந்தளத்தின் மகாராஜா மார்த்தாண்ட வர்மா என்ற அரசன் ‎காயம்குளம் இராஜ்ஜியத்தை கைப்பற்ற உதவினார். இந்த ‎உதவிக்கு கைமாறாக, மார்த்தாண்ட வர்மா தனது ‎சாம்ராஜ்ஜியத்தை விரிவுபடுத்திய பொழுது, பந்தளத்தின் மீது ‎படையெடுத்து அதையும் தன சாம்ராஜ்ஜியத்துடன் இணைக்க ‎விரும்பவில்லை. ஒரு காலகட்டத்தில் பந்தள மகாராஜாவின் ‎தர்பார் இடுக்கி மாவட்டத்திலுள்ள தொடுபுழா என்ற இடம் வரை ‎பரந்து விரிந்திருந்தது. 1820 ஆண்டில் பந்தளம் திருவிதாங்கூறுடன் ‎இணைக்கப்பட்டது. ‎
 
== வணிகம் மற்றும் வர்த்தகம் ‎ ==
மத்திய திருவிதாங்கூறில் காணப்படும் குருந்தோட்டயம் சந்தை, பல ‎நூற்றாண்டுகளாக புழக்கத்தில் இருந்துவந்தது, (தற்பொழுது ‎பந்தளம் சந்தை என அறியப்படுவது) வேளாண் பொருட்களுக்கான ‎மிகப்பெரிய மற்றும் புகழ்பெற்ற சந்தையாகும். 1990 ஆண்டுகளின் ‎இறுதிவரை இந்த பட்டிணத்தின் நடுவில் செயல்பட்டுவந்த இந்த ‎சந்தை, ஆட்பெருக்கம் காரணமாக மற்றும் மேலும் வசதிகள் ‎வழங்குவதற்காக, பந்தளம் மற்றும் மாவேலிக்கரையை ‎இணைக்கும் சாலையில் அமைந்த ஒரு விரிவான இடத்திற்கு, ‎நாளடைவில் மாற்றப்பட்டது. பந்தளம் இப்பொழுது, போதிய ‎வசதிகளுடன், நாட்டிலுள்ள இதர அனைத்து நகரங்களுடன் ‎நன்றாக இணைக்கப்பட்ட, மிக முக்கியமான மற்றும் ‎நவீனமயமாக்கப்பட்ட முதன்மை நகரமாகும்.‎
"https://ta.wikipedia.org/wiki/பந்தளம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது