வெலிகமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary அடையாளங்கள்: கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
பிழைதிருத்தம் அடையாளங்கள்: Visual edit கைப்பேசியில் செய்யப்பட்ட தொகுப்பு கைப்பேசி வலைத்தளத்தில் செய்யப்பட்ட தொகுப்பு |
||
வரிசை 40:
|footnotes =
}}
'''வெலிகமை''' அல்லது '''வெலிகாமம்''' என்பது (''Weligama'', வெலிகம) [[இலங்கை]]யின் [[தென் மாகாணம், இலங்கை|தென் மாகாணத்தில்]] [[மாத்தறை மாவட்டம்|மாத்தறை]] மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு முக்கிய நகராகும். இது கொழும்பிலிருந்து 144
[[வெலிகமை நகர சபை]], [[வெலிகமை பிரதேச சபை]] ஆகிய இரு உள்ளூராட்சி
== இயற்கையமைப்பு ==
இங்கு ஓடும் பொல்வத்து ஒயா எனப்படும் நதி பல்வேறு இடங்களிலும் வளைந்து நெளிந்து செல்வதால், இது வெலிகமையின் பற்பல பகுதிகளையும் தொட்டுச் செல்கிறது. பண்டைக் காலத்தில் இலங்கையின் பல்வேறு இடங்களில் அமைந்திருந்த இயற்கைத் துறைமுகங்களுள் ஒன்றான பொல்வத்து கங்கை அல்லது பொல்வத்து ஒயா என்ற ஆற்றின் கழிமுகத்தில் அமைந்திருந்த வெலிகாமப் பட்டினம் ''மகாவாலுக்காகமை'' என்றழைக்கப்பட்டது<ref>http://amazinglanka.com/wp/ports-of-ancient-sri-lanka/</ref>. இதனாலேயே ஆதி
தற்காலத்தில் வெலிகமையின் ஒரு பகுதியான மிரிசையில் மீனவத் துறைமுகமொன்று காணப்படுகின்றது. இதனை அண்டியே 0.32
தாழ் நில ஈரவலயத்தில் அமைந்துள்ளமையால் இங்கு பொதுவாக இதமான காலநிலை நிலவுகிறது. கடலில் நீர்மட்டம் உயர்ந்து ஆற்று நீர்மட்டம் குறையும் காலங்களில் சுறா மீன்கள் பொல்வத்து கங்கையினுள் ஊடுருவுவதுண்டு. ஆற்றின் இருமருங்கிலும் ஆங்காங்கே காணப்படும் புதர் நிறைந்த இடங்களில் முதலைகள் வாழ்கின்றன. ஆற்றில் நீர்நாய்களும் ஆற்று நண்டுகளும் ஆற்று மட்டிகளும் காணப்படுகின்றன. உட்புறக் காடுகளில் [[செங்குரங்கு]], [[சருகுமான்]], [[கொடும்புலி]], [[வரி முயல்]], [[முள்ளம் பன்றி]], [[உடும்பு]], [[பொன் மரநாய்]], [[கீரிப் பிள்ளை]], [[நீர் நாய்]] போன்ற விலங்குகளும், [[குந்து காலி|குந்துகாலி]], [[பாலகன் (பறவை)|பாலகன்]], [[நீர்க் காகம்|நீர்க்காகம்]], [[மைனா]], [[மாம்பழத்தி]], [[மயில்]], [[குயில்]], [[செம்பகம்]], [[சிச்சிலி]], [[கொக்கு]], [[மணிப் புறா]] போன்ற பறவைகளும் வாழ்கின்றன. [[அவுத்திரேலியா]], [[சைபீரியா]] போன்ற இடங்களிலிருந்து வலசை போகும் [[பம்பலி கொக்கு]], [[மானில்]] போன்ற பறவையினங்கள் சிலவற்றையும்
உட்பகுதிகளில் நல்ல குடிநீர் கிடைக்கிறது. ஆயினும் கடற்கரையை அண்டிய இடங்களில் நீர் சற்று உவர்ப்பாக உள்ளது. ஆங்காங்கே சிறு மலைகள் காணப்படுகின்றன. கடலை அண்மித்த மலைகளற்ற சமதரையான இடங்களில் நிலத்தடியில் சிப்பிகள், சங்குகள், பவளங்கள் போன்ற கடலுயிரினங்களின் புதைபடிவங்கள் ஏராளமாகக் கிடைக்கின்றன.
|