அரிகேசரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கட்டுரைகள் இணைக்க
வரிசை 1:
{{merge to|நின்றசீர் நெடுமாற நாயனார்|discuss=|date=August 2017}}
'''அரிகேசரி''' கி.பி. 640 முதல் 670 வரை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஆவான்.பாண்டிய மன்னன் [[செழியன் சேந்தன்|செழியன் சேந்தனின்]] மகனான இவன் தந்தையின் இறப்பிற்குப் பின்னர் முடிசூடிக் கொண்டான். கி.பி.640 ஆம் ஆண்டளவில் '''மாறவர்மன்''' என்ற பட்டத்தினைப் பெற்றான். [[திருவிளையாடல் புராணம்|திருவிளையாடல் புராணத்தில்]] இவன் '''சுந்தர பாண்டியன்''', '''கூன் பாண்டியன்''', போன்ற பெயர்களினாலும் '''அரிகேசரி பராங்குசன்''' என்று பெரிய சின்னமனூர்ப் பட்டயங்களிலும் அழைக்கப்பட்டுள்ளான்<ref name="tamilvu"/>.
 
== அரிகேசரி ஆற்றிய போர்கள் ==
அரிகேசரி என்னும் இவன் பெயர் இவன் மேற்கொண்ட போர்களின் வெற்றியினைப் பறை சாட்டும் விதமாக அளிக்கப்பெற்ற பட்டம் ஆகும். [[சோழ நாடு|சோழ நாட்டின்]] மீது படையெடுத்து [[உறையூர்|உறையூரை]] முற்றுகையிட்டு அங்கு ஆட்சி செய்து வந்த [[மணிமுடிச் சோழன்|மணிமுடிச் சோழனை]] [[போர்|போரில்]] வெற்றி பெற்றான். வெற்றிப்பரிசாக மணிமுடிச் சோழனது மகள் [[மங்கையர்க்கரசி]]யினை [[மனைவி]]யாகப் பெற்றான் அரிகேசரி<ref name="tamilvu">{{cite web | url=http://www.tamilvu.org/courses/degree/a031/a0312/html/a0312442.htm | title=4.2.3 மாறவர்மன் அரிகேசரி (கி.பி. 640-670) | publisher=தமிழ் இணையப் பல்கலைக்கழகம் | accessdate=18 சூலை 2015}}</ref>. மங்கையர்க்கரசி பாண்டிய நாட்டின் [[அரசி]]யாக முடிசூடிக்கொண்டாள். தனைத்தொடர்ந்து அரிகேசரி படையெடுத்து சேர மன்னனொருவனோடு போர் செய்து வெற்றியும் பெற்றான். பரவரை புடைத்தான்; பாழி, செந்நிலம் குறுநில மன்னர்களை வென்றான். திருநெல்வேலியையும் வென்றான் என இவனை ஆற்றிய போர்களைப் பற்றி [[வேள்விக்குடிச் செப்பேடு]] கூறுவது குறிப்பிடத்தக்கது.
 
== அரிகேசரியின் சமயப் பணிகள் ==
அரிகேசரி ஆரம்ப காலத்தில் [[சமணம்|சமணத்தினைப்]] பின்பற்றி பின் [[சைவ சமயம்|சைவ சமயத்தின்]] வழியில் நடந்தவனாவான். இவன் மனைவி [[மங்கையர்க்கரசி]] மற்றும் இவனது அமைச்சர் [[குலச்சிறையார்]] சைவ சமயத்தைப் பின்பற்றியவர்கள் [[திருஞான சம்பந்தர்|திருஞான சம்பந்தருடன்]] நட்புற்றிருந்தனர். இம்மூவருமே அரிகேசரியைச் சைவ சமயத்திற்கு மதமாற்றம் செய்து வைத்தனர்<ref name="tamilvu"/>. அரிகேசரியும் [[சிவன்|சிவனின்றி]] கதியில்லை என்று சைவ சமயத்திற்குப் பணி செய்ய முனைந்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.
[[சமண முனிவர்]] எண்ணாயிரவர்க்கும்,திருஞான சம்பந்தர்க்கும் சிவன் முன்னிலையில் அனல் வாதமும், புனல் வாதமும் நடைபெற்றது எனவும் சிவபெருமானிடம் பேரன்பு கொண்ட அரிகேசரி, மங்கையர்க்கரசி, குலச்சிறையார் மூவரும் [[பெரிய புராணம்|பெரிய புராணத்தில்]] இடம் பெற்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
சுந்தரர் இவரைத் [[திருத்தொண்டத் தொகை]]யில்
{{cquote|
"''நிறை கொண்ட சிந்தையான் நெல்வேலிவென்ற''
 
''நின்றசீர் நெடுமாறன் அடியார்க்கும் அடியேன்''!"}}
 
என்ற பாடல் வரியின் மூலம் [[நெல்வேலி]]ப் போரில் இம்மன்னன் வென்றவனெனவும்,[[சேரர்|சேரனும்]], பிற [[குறு நில மன்னர்கள்|குறு நில மன்னர்களும்]] இவனுக்குத் திரைசெலுத்தியதாகவும் மன்னர் மன்னனாய் வாழ்ந்தான் எனவும் சம்பந்தர் தெரிவிக்கின்றார். அரிகேசரி [[துலாபாரமும்]], இரணிய கர்ப்பதானமும் செய்தான் என்று [[வேள்விக்குடிச் செப்பேடு]] தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
சீனப் பயணியான '[[யுவான்சுவாங்]]' அரிகேசரியின் தந்தை காலத்தில் வரமுடியாமல் இவன் ஆட்சிக் காலத்தில் பாண்டிய நாட்டிற்கு வருகை புரிந்தான் மேலும் அவனது நாட் குறிப்பில் அவன் கூறுவதாவது:
"பாண்டிய நாட்டில் உப்பும் முத்தும் மிகுதி!அருகிலிருந்த தீவுகளில் இருந்து முத்துக்கள் கொண்டு வரப்படுகின்றன. இங்கு வேறு விளை பொருள் இல்லை! வெப்பம் மிக்க நாடு இது.இந்நாட்டு மக்கள் கருத்தமேனி உடையவர்கள்;உறுதியும் போர் வலிமையும் உடையவர்கள்; பாண்டி நாடு வணிகத்தில் வளம் பெறுகிறது. செல்வத்தால் சிறந்துள்ளது" எனப் பாண்டிய நாட்டினைப் பற்றிக் குறிப்பிட்டுள்ளார்.
 
==மேற்கோள்கள்==
{{reflist}}
==வெளி இணைப்புகள்==
*[https://www.youtube.com/watch?v=YviIb6cj9bU&list=PL1v_OuVkETZ6WeMhAuE0z3kwvKRKqW5zp&index=1 மதுரை சாமநத்தம் பகுதியில் 8,000 சமணர்கள் கழுவேற்ற வரலாறு]
{{பாண்டிய மன்னர்கள்}}
[[பகுப்பு:பாண்டிய அரசர்கள்]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/அரிகேசரி" இலிருந்து மீள்விக்கப்பட்டது