சென்னையின் புறநகர் பகுதியில் வசிக்கும் ஷேர்ஆட்டோஷேர் ஆட்டோ டிரைவர் சக்தி (திலீபன்) அதே குடியிருப்பில் வசிக்கும் ஆங்கிலம் பயிலும் லீனா (அஞ்சலி) நேசிக்கிறார். சக்தி தன் ஷேர் ஆட்டோவில் அடிக்கடி பயணிக்கும் அஞ்சலியிடம் தன் நேசத்தை சொல்லிவிட அஞ்சலியோ மனதில் ஆசையிருந்தாலும் அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல் இருக்கிறார். இந் நிலையில் சக்தி பிறருக்கு உதவி செய்வதால் சிக்கல்களைச் எதிர்கொள்கிறார். உள்ளூர் ரவுடி பென்னி (சம்பத்) தலைமையிலான கூலிப்படையும் அவர்களுக்கு பண உதவி செய்யும் நகைக்கடை அதிபர் கங்காரியா (ஜெயபிரகாஷ்) மற்றும் வனராஜ் மற்றும் வனராஜின் நண்பர்கள் ஆகியோர் சக்தியை பழிவாங்க துடிக்கிறார்கள். அத்தனை எதிரிகளிடமும் இருந்து சக்தி தப்புவாரா இல்லையா என்பதே படத்தின் மீதிக்கதை