அகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
→‎குறிப்புக்கள்: ==மேற்கோள்கள்==
சி மேம்படுத்தல் using AWB
வரிசை 1:
உலக வளர்ச்சிக்கு அன்பின் தொடர்பு இன்றியமையாதது.  அந்த அன்பானது இரண்டு உயிர்களின் தனித்தனி நிலையில் உண்டாவதில்லை; அவை ஆணும் பெண்ணும் என்ற இரண்டின் கூட்டுறவால் நிகழும் வாழ்வியல் முறையாகும்.  பழந்தமிழர் வாழ்வியலில் '''அகம்''' என்பது, [[ஆண்|ஆணும்]], [[பெண்|பெண்ணும்]] ஒருவரையொருவர் கண்டு, காதலித்து, மணம்புரிந்து, இல்லறம் நடத்துவதோடு தொடர்புடைய வாழ்வின் பகுதி ஆகும்.<ref>பிள்ளை, கே. கே., 2009. பக்.132.</ref> பழந்தமிழ் [[இலக்கியம்|இலக்கியங்கள்]] மக்களின் அகவாழ்க்கை பற்றி மிகவும் விரிவாகப் பேசுகின்றன. தமிழ் இலக்கண நூலான [[தொல்காப்பியம்]] இலக்கியங்களில் அகப்பொருளைக் கையாள்வது பற்றிய இலக்கணங்களை வகுப்பதுடன், அக்காலத்தின் அக வாழ்வின் பல்வேறு அம்சங்கள் பற்றியும் எடுத்துரைக்கின்றது.
 
==சொற்பொருள்==
அகம் என்பது காரணப் பெயர் என்றும், இது போக நுகர்ச்சி ஆதலாலும், அதனால் விளையும் பயனைத் தானே அறிதலாலும் அகம் எனப்பட்டது என்றும் தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் கூறுகிறார்.<ref>தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, 2006. பக். 3</ref> ஒரு ஆணும், ஒரு பெண்ணும் ஒருவரோடு ஒருவர் கூடும்போது பிறக்கும் இன்பம் அவர்கள் அகத்தால் (உள்ளத்தால்) உணரப்படுவது. இதனாலேயே அது அகம் எனப்பட்டது என்பர். வாழ்வின் அகம் சார்ந்த பகுதி '''அகத்திணை''' எனப்பட்டது. இலக்கியங்கள் இது பற்றிப் பேசும்போது அதை '''அகப்பொருள்''' என்றனர்.
 
==கருத்துரு==
வரிசை 11:
 
== '''களவு''' ==
களவானது, தலைவனும் தலையும் பெற்றோர் அறியாமல் தாமே எதிர்ப்பாராமல் சந்தித்துக் கூடுவது.  இக்களவு பிறரின் பொருள்களை அவர்கள் அறியாமலேயே கவர்ந்து கொள்ளும் களவு (திருட்டு) போலத் தீயது அன்று.  அத்தலைமக்கள் பின்பு மணம் செய்துகொண்டு மனையறம் காக்கும் கடமை உள்ளதால் இவையும் அறமாகவே கருதப்படுகிறது.
 
தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் '''அகத்திணையியல்''', '''புறத்திணையியல்''' அடுத்து, '''களவியல்''' என்ற இயல் வருகிறது. இக்களவியல் அகத்திணைகளில் ஒருதலைக் காதலாகிய '''கைக்கிளை''', பொருந்தாக் காதலாகிய '''பெருந்திணை''' ஆகியவற்றை நீக்கி, அன்பின் ஐந்திணைகளை மட்டும் கூறுகின்றது. இக்களவானது,
 
* இயற்கைப் புணர்ச்சி
 
    தலைவனும், தலைவியும் ஊழ்வினை காரணமாக தாமே இயற்கையாக சந்திப்பது.
 
* இடந்தலைப்பாடு
 
    இயற்கைப் புணர்ச்சிக்கு பின் தலைவன், தலைவியும் மீண்டும் சந்திக்க வேண்டும் என்ற ஆவலில் மீண்டும் அவ்விடத்திற்கு சென்று கூடுதல்.
 
* பாங்கற் (தோழர்) கூட்டம்
 
    முன்பு குறிப்பிட்ட இடத்தில் தலைவி வந்து நின்ற நிலையைக் பாங்கனாலறிந்து (தலைவனின் தோழர்) சென்று கூடுதல்.
 
* பாங்கற்(தோழியிற்) கூட்டம்
 
இக்களவொழுக்கம் நீட்டித்து நடத்த விரும்பிய தலைவன், தலைவியின் தோழி இவள் என்பதை அறிந்து, அவள தனித்திருக்கும் நிலையிலும் தலைவியோடு கூடி இருக்கும் நிலையிலும், தன் குறையிரந்து கூறி அத்தோழி வாயிலாகக் கூடுதல்.
வரிசை 36:
கற்பானது, தலைவன் தனக்குக் உரியத் காதற் தலைவியின் சுற்றத்தார் கரணத்தோடு (சடங்குகளோடு) மணம் செய்து கொடுப்பதைக் கூறுவதாகும்.  அவ்வாறு இன்றி நடைபெறும் சூழ்நிலையும் கற்பு நிலையில் நடைபெறுவது உண்டு. இவ்வகை கற்பின் மணமானது,
 
* மறைவெளிப்படுதல்
 
    களவொழுக்கம் பூண்டவர் தாமே மணம் செய்து கொள்ளும் முறை.  இம்மணத்திற்குப்பின் அவர்களின் மறையொழுக்கம் ஊராருக்குத் தெரியவரும்.
வரிசை 56:
==உசாத்துணைகள்==
* தொல்காப்பியம் பொருளதிகாரம் இளம்பூரணனார் உரை, சாரதா பதிப்பகம், சென்னை, 2006.
* பிள்ளை, கே. கே., ''தமிழக வரலாறு மக்களும் பண்பாடும்'', உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம்'', சென்னை, 2009.
 
[[பகுப்பு: தமிழர் வாழ்வியல்]]
 
[[பகுப்பு: தமிழர் வாழ்வியல்]]
"https://ta.wikipedia.org/wiki/அகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது