|footnotes=
}}
'''மீனாட்சிசுந்தரம் பிள்ளை''' (ஏப்ரல் 6, 1815 - பிப்ரவரி 1, 1876; [[திருச்சிராப்பள்ளி]], [[தமிழ்நாடு]]) சிறந்த தமிழறிஞர். [[உ. வே. சாமிநாதையர்|உ. வே. சாமிநாதையரின்]] ஆசிரியர். திருவாவடுதுறை ஆதீனத் தலைவர் அம்பலவாண தேசிகர் இவருக்கு ‘மகாவித்வான்’ என்ற பட்டத்தை அளித்துச் சிறப்பித்தார். திருவாவடுதுறை மடத்தின் தலைமைப் புலவராகத் திகழ்ந்தார். சீர்காழியில் முன்சீப்பாகமுன்சீபாகப் பணியாற்றிய தமிழில் முதல் புதினமான பிரதாப முதலியார் சரித்திரத்தை எழுதிய மாயூரம் [[வேதநாயகம் பிள்ளை]]யுடன் நெருங்கிய நட்புக் கொண்டிருந்தார். அவர் மீது வைத்திருந்த பெருமதிப்பின் காரணமாக, அவரைப் பாராட்டி ‘குளத்துக்கோவை’ என்னும் நூலை இயற்றினார்.
==வாழ்க்கையும்,கல்வியும்==
இவர் திருச்சி அருகே உள்ள எண்ணெயூரில் 1815இல் பிறந்தார். இவரின் பெற்றோர் சிதம்பரம் பிள்ளை, -அன்னத்தாச்சி ஆகியோர் ஆவர். தமிழ்ப் புலவரான தனது தந்தையிடமே தமிழ் கற்றார். சென்னை சென்று சபாபதி முதலியார், அம்பலவாண தேசிகர் உள்ளிட்ட தமிழ் அறிஞர்களிடம் கல்வி பயின்று புலமைப் பெற்றார். காப்பியங்கள், அற நூல்கள், காப்பியங்கள், சித்தாந்த சாத்திரங்கள், பேருரைகள், சிற்றிலக்கியங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்தார். இவர் அபார நினைவாற்றல் கொண்டவராகத் திகழ்ந்தார். பாடல்களைப் படித்த வேகத்தில் மனத்தில் பதிய வைத்துக்கொண்டுவிடுவார். சிறு வயதிலேயே பாடல் புனையும் ஆற்றல் பெற்றிருந்தார்.
==இலக்கியப் பணிகள்==
சிற்றிலக்கியக் காலம் என்று கூறப்பட்டஅழைக்கப்படும் இவரது காலத்தில் வாழ்ந்த இவர், திருத்தலங்களின் வரலாற்றை விவரித்து ஏராளமான தல புராணங்கள் பாடினார். 19-ம் நூற்றாண்டில் தமிழில் அதிக நூல்களை இயற்றியவர் இவர்தான். புராணங்கள், காப்பியங்கள், பிள்ளைத் தமிழ் நூல்கள், அந்தாதி, கலம்பகங்கள், கோவைகள், எண்ணற்ற தனிப் புராணங்களை இயற்றியுள்ளார். பிள்ளைத்தமிழ் நூல்களைப்நூல்களை அதிகமாகப் பாடியதால் ‘பிள்ளைத் தமிழ் மீனாட்சி சுந்தரம் பிள்ளை’ என்று புகழப்பட்டார்.
பெரியபுராணம்பெரியபுராணச் பிரசங்கம்சொற்பொழிவு செய்வதில் வல்லவர். இவரது படைப்புகள் அனைத்துமே செய்யுள் வடிவில் அமைந்துள்ளன. சுமார் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட பாடல்களை இவர் இயற்றியதாகக்இயற்றியதாக அறியவருகின்றதுஅறிய முடிகின்றது. <ref>தினமணி, சாலப்பெரிய ஆசிரியர் பிரான், கட்டுரை, ம.வே.பசுபதி. 6.4.2015</ref>இதுவரை அச்சில் வெளிவந்த இவரது நூல்கள்நூல்களின் எண்ணிக்கை 75 ஆகும்.
==கல்விப் பணி==
மயிலாடுதுறையில் பலகாலம் தங்கிதங்கியிருந்த இவரது புலமையை அறிந்து நாடிவந்த பல மாணவர்களுக்கு பொருள் எதிர்பாராமல் தமிழ் கற்பித்தார். பணம் பெற்றுக்கொண்டு பாடம் சொல்லிக்கொடுக்கும்சொல்லிக் கொடுக்கும் பழக்கம் இவரிடம் இல்லை. தன்னிடம் கல்வி பயில வரும் ஏழை மாணவர்களைச் சொந்தசொந்தப் பிள்ளைகள்பிள்ளைகளைப் போலக் கருதி உணவும், இடமும் அளித்துஅளித்துக் குருகுல முறையில் பாரபட்சமின்றிபாரபட்சமின்றிக் கல்வி புகட்டினார். கவிதைகள் பாடிபாடிச் சன்மானமாகப் பெற்ற செல்வத்தைக்கொண்டேசெல்வத்தைக் கொண்டே இவர் தனக்கும் தன் மாணாக்கர்களுக்கும்மாணாக்கர்க்கும் செலவழித்தார். இவரிடம் பயின்ற மாணவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் உ.வே.சாமிநாத ஐயர், குலாம் காதர், நாவலர், சவுரிராயலு நாயக்கர் ஆகியோர் ஆவர்.
'தாயைவிட என் மீது அதிக அன்பு கொண்டிருந்தவர் என் ஆசான்’ என்று உ.வே.சா. இவரைக் குறிப்பிட்டுள்ளார். இவரது படைப்புகள் 42ஐ ஸ்ரீமீனாட்சிசுந்தரம் பிள்ளை பிரபந்தத் திரட்டு என்னும் பெயரால் இரு தொகுதிகளாக உ.வே.சா. வெளியிட்டுள்ளார். [[திரிசிரபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்களின் சரித்திரம் (நூல்)|திரிசிபுரம் மகாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்]] என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாற்றை உ.வே.சா. விரிவாக இரு பாகங்களாக விரிவாக எழுதி வெளியிட்டார். இந்நூலே இவரைப்பற்றி அறிந்துகொள்ளஅறிந்து கொள்ள உறுதுணையாக உள்ளது.
==மறைவு==
|