'''தோமால சேவை''' ({{lang-en|Thomala Seva}}) என்பது வைணவத்திருக்கோயில்களில் மூலவரான நாராயணனுக்கு நடத்தப்படும் பலவித உபசாரங்களில் ஓன்றாகும். <ref>[http://www.tirumala.org/ThomalaSeva.aspx Thomala Seva]</ref>பொதுவாக வைணவத் திருக்கோயில்களில் மூலவருக்கு நடத்தப்படும் ஒவ்வொரு உபசாரமும் சேவைகள் என்றே அழைக்கப்படும். உதாரணமாக, திருப்பள்ளியெழுச்சி பாடி துயிலெழுப்புவதை "சுப்ரபாத சேவை" என்றும், ஊஞ்சலில் ஆட்டுவிப்பதை "ஊஞ்சல் சேவை" என்றும், கருடவாகனத்தில் எழுந்தருளுவதை "கருட சேவை" என்றும் அழைப்பதைக் கூறலாம். தினமும் திருமஞ்சனம் (நீராட்டல் என்பதின் வைணவ தமிழ்ச்சொல்) ஆனவுடன் பெரிய பூமாலை சாற்றப்படும் வைபவத்தையே இச்சேவை குறிப்பிடுகின்றது. ஆளுயர பூமாலையை தொடுத்து திருமுடி (கிரீடம்) முதல் திருவடி வரை தோளையொட்டியவாறு சாற்றுவதையே தோமால சேவை என அழைக்கப்பட்டுவருகின்றது. தோள்மாலை (தோடிட்டமாலை என்றும் கூறுவர்) என்பதே மருவி தெலுங்கில் தோமாலா என்றானது.