முக்குணங்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துப்புரவு
வரிசை 1:
'''முக்குணங்கள்''' ''{{IAST|Guṇa}}'' (''{{lang-sa| गुण}}'') என்பது [[சாங்கியம்|சாங்கிய]] தத்துவத்தின்படி ''[[சத்துவ குணம்|சாத்விக குணம்]]'', ''[[இராட்சத குணம்|இராஜச குணம்]]'', மற்றும் ''[[தாமச குணம்]]'' ஆகியவைகளைக் குறிப்பதாகும். சாத்வீகம் வெள்ளை நிறத்தையும், இராஜசம் சிவப்பு நிறத்தையும், தாமசம் கறுப்பு நிறத்தினையும் குறிக்கும் என்பர். இக்குணங்களின் அடிப்படையிலேயே உயிர்களிடையே வேறுபாடுகள் காணப்படுகின்றன என்பது பொதுவான கருத்து. [[சாங்கியம்|சாங்கியர்கள்]] முக்குணங்களின் சேர்க்கையினாலேயே உலகமானது உருவாகியது என்பர். முக்குணங்கள் சமநிலையில் இல்லாத போது [[பிரளயம்]] தோன்றுகிறது.
 
== சத்வ (சாத்விகம்) குணம் ==
சத்வ குணத்திலிருந்து தோன்றும் இயல்புகள்- நற்காரியங்களில் மனதைச் செலுத்தும் குணம், மன அடக்கம் (சமம்), புலன் அடக்கம் (தமம்), துன்பங்களைப் பொறுத்துக் கொள்ளும் இயல்பு (சகிப்புத் தன்மை), விவேகம், [[வைராக்கியம்_வைராக்கியம் (வேதாந்தம்)|வைராக்கியம்]], தவம், வாய்மை, கருணை, மகிழ்ச்சி, நம்பிக்கை, பாவம் செய்வதில் கூச்சப்படுதல் (லஜ்ஜை), தன்னிலேயே மகிழ்ந்திருத்தல் (ஆத்மரதி), தானம், பணிவு மற்றும் எளிமை.
 
=== சத்வ குண பலன்கள் ===
சத்வ குணத்திலிருந்து தர்மச்செயல்கள்; தன் செயல்களைப் பகவானுக்கு அர்ப்பணம் செய்து விடுவது; பலனில் ஆசையில்லாமல் செயல்கள் செய்வது சாத்வீக குணமாகும். சத்வ குணமுடையோன் தெய்வத்தன்மையும், நிவிருத்தி மார்க்கமும்; விழிப்பு நிலையும் மற்றும் மேலுலகங்களை அடைகிறான்.
 
== ரஜோ (இராஜசம்) குணம் ==
ரஜோ குண இயல்புகள்- ஊக்கம், ஞானம், வீரம், தருமம், தானம், கல்வி, ஆசை, முயற்சி, இறுமாப்பு, வேட்கை, திமிர், தெய்வங்களிடம் செல்வங்கள் வேண்டுவது, வேற்றுமை எண்ணம், புலனின்பப் பற்று, சண்டைகளில் உற்சாகம், தன் புகழில் ஆசை, மற்றவர்களை எள்ளி நகையாடுவது, பராக்கிரமம், பிடிவாதத்துடன் ஒரு முயற்சியை மேற்கொள்ளுதல்.
பயனில் விருப்பம் கருதி செய்யும் செயல்கள் ராஜசமாகும்.
 
=== ரஜோ குண பலன்கள் ===
ரஜோ குணத்திலிருந்து இன்பப் பற்று; ரஜோ குணப் பெருக்கினால் அசுரத்தன்மையும், செயல் புரிவதில் ஆர்வம், கனவு நிலையும், இறப்பிற்குப்பின் மனித உடலையும் அடைகிறான்.
 
== தமோ (தாமசம்) குணம் ==
தமோ குண இயல்புகள்- காமம், வெகுளி, மயக்கம், கலக்கம், கோபம், பேராசை, பொய் பேசுதல், இம்சை, யாசித்தல், வெளிவேசம், சிரமம், கலகம், வருத்தம், மோகம், கவலை, தாழ்மை, உறக்கம், அச்சம், சோம்பல், காரணமில்லாமல் பிறரிடம் பொருட்களை எதிர்பார்த்தல் மற்றும் பிறர்க்கு கேடு விளைவிக்கும் செயல்கள் செய்வதும், பகட்டுக்காக செய்யப்படும் செயல்கள் தாமச குணங்கள் ஆகும்.
 
=== தமோ குண பலன்கள் ===
தமோ குணத்திலிருந்து, சோம்பல் உண்டாகிறது. தமோ குணப்பெருக்கினால் இராட்சசத் தன்மையும், மோகமும் அதிகரிகின்றது. தமோ குணத்தினால் தூக்கநிலையும் உண்டாகிறது. தமோ குணத்தால் மறுபிறவியில் விலங்கு, மரம், செடி, கொடி போன்ற தாழ்வான நிலை பிறப்பு உண்டாகிறது.
 
==வெளி இணைப்புகள்==
* http://www.hinduism.co.za/sattwa,.htm Sattwa, Rajas & Tamas From The Mahabharata
 
== மூன்று குணங்கள் (தமிழ்) புத்தகம் ==
* [https://drive.google.com/file/d/16xOIDpCouEctnNxGyr8O0_cKGqTrhRKr/view?usp=sharing/ மூன்று குணங்கள் - சுவாமி பிரபஞ்சநாதன்]
 
[[பகுப்பு:சாங்கியம்]]
"https://ta.wikipedia.org/wiki/முக்குணங்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது