பூந்தானம் நம்பூதிரி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"Poonthanam Nambudiri" பக்கத்தை மொழிபெயர்த்ததன் மூலம் உருவாக்கப்பட்டது |
No edit summary |
||
வரிசை 1:
'''பூந்தானம் நம்பூதிரி''' (Poonthanam Nambudiri) (பொ.சா.1547 – 1640) என்பவர் ஒரு பிரபல கவிஞரும், [[குருவாயூர் குருவாயூரப்பன் கோயில்|குருவாயூர் குருவாயூரப்பன்]] பக்தரும் ஆவார். இவர் இந்தியாவின் [[கேரளம்|கேரளாவின்]] [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்தில்]] கீழத்தூரில் வசித்து வந்தார். [[மலையாளம்|மலையாளத்தில்]] "தெய்வீக ஞானத்தின் பாடல்" என்று பொருள்படும் ''[[ஞானப்பான|ஞானப்பானா]]'' என்ற இவரது தலைசிறந்த படைப்புக்காக இவர் நினைவுகூரப்படுகிறார். மலையாளத்தில் இவரது மற்ற முக்கிய கவிதைகள் ''பாசா கர்ணாமிருதம்'' மற்றும் ''குமாரகரணம்'' அல்லது ''சந்தனகோபாலம் பனா'' என்பதாகும். இவரது மற்ற படைப்புகளில் இராகவியம், விஷ்ணுவிலாசம் மற்றும் சமசுகிருதத்தில் சீதாராகவம் மற்றும் நவீன மலையாளத்தில் விஷ்ணுகீதா மற்றும் பஞ்சதந்திரம் ஆகியவை அடங்கும்.
வரி 4 ⟶ 5:
== ஆரம்ப கால வாழ்க்கை ==
பூந்தானம் 1547 ஆம் ஆண்டில் [[அச்சுவினி (நட்சத்திரம்)|அசுவினி]] நாளில் [[தமிழ் மாதங்கள்|மாசி]] மாதத்தில், [[மலப்புறம் மாவட்டம்|மலப்புறம் மாவட்டத்தில்]] [[பெரிந்தல்மண்ணை|பெரிந்தல்மண்ணைக்கு]] அருகிலுள்ள கீழாத்தூரில்,ஒரு [[நம்பூதிரி]] [[பிராமணர்|பிராமணக்]] குடும்பத்தில் பிறந்தார். <ref name="Menon">{{Cite book|author=I K K Menon|title=FOLK TALES OF KERALA|url=https://books.google.com/books?id=pCv2DAAAQBAJ&pg=PT194|publisher=Publications Division Ministry of Information & Broadcasting Government of India|isbn=978-81-230-2188-1|pages=194–}}</ref> இவர் தனது 20 வயதில் திருமணம் செய்து கொண்டார், ஆனால் நீண்ட காலமாக அவர்களுக்கு குழந்தைகள் இல்லை. அவர் 'சந்தனா கோபாலம்' ஓதுவதன் மூலம் [[குருவாயூர்]] இறைவனைப் பிரியப்படுத்தத் தொடங்கினார். பின்னர் இவருக்கு ஒரு மகன் பிறந்தார். அதற்கான ஒரு கொண்டாட்டத்திற்கு அழைப்பு விடுத்தார். தெரிந்த அனைவரும் அழைக்கப்பட்டனர். ஆனால் அன்னபிரசனம் விழாவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பே குழந்தை இறந்துவிட்டது. <ref name="thehindu_a">{{Cite news|title=Devotee the Lord loved|url=http://www.thehindu.com/todays-paper/tp-features/tp-fridayreview/article3659524.ece}}</ref> துயரமடைந்த பூந்தானம் [[குருவாயூர்]] கோயிலி தஞ்சம் புகுந்து குமாரகரணத்தின் புராணக் கதையுடன் பிரார்த்தனை செய்யத் தொடங்கினார். மனம் உடைந்த பூந்தானம், ஒரு குழந்தையாக, ஒரு கணம், தனது மடியில் படுத்துக் கொண்ட குருவாயுரப்பனால் ஆறுதலடைந்ததாகக் கூறப்படுகிறது. அவர் [[கிருட்டிணன்|கிருட்டிணரை]] தனது மகனாக கருதி ஞானம் அடைந்தார். ஞானப்பனாவில் அவர் எழுதுகிறார்: "சிறிய கிருட்டிணர் நம் இதயத்தில் நடனமாடுகையில், நமக்கு சொந்தமான சிறியவர்கள் தேவையா?" . பூந்தானம் தனது வாழ்நாள் முழுவதையும் [[பாகவதம் (புராணம்)|பாகவதத்தைப்]] படித்து, இறைவனின் மகிமைகளை எளிய [[மலையாளம்|மலையாளத்தில்]] பாடினார். இவரது மகத்தான பணி, ஞானப்பனா என்பது இந்த காலகட்டத்தில் இயற்றப்பட்டது. <ref name="guruvayurdevaswom">http://www.guruvayurdevaswom.org/spoonthanam.shtml</ref> இவரது வீடான பூந்தானம் இல்லம் என்பது இப்போது குருவாயூர் தேவஸ்வத்தின் கீழ் உள்ளது. <ref>{{Cite news|title=Steps to develop Poonthanam Illam|url=http://www.hindu.com/2006/07/14/stories/2006071404110200.htm}}</ref>
== பூந்தானம் மற்றும்
இவர் [[குருவாயூர்|குருவாயூருடன்]] தொடர்புடைய மற்றொரு பிரபல கவிஞரான
== இறப்பு ==
வரி 15 ⟶ 16:
== குறிப்புகள் ==
{{Reflist}}
== வெளி இணைப்புகள் ==
|