கு. மா. பாலசுப்பிரமணியம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Ezhilarasi (பேச்சு | பங்களிப்புகள்)
No edit summary
வரிசை 17:
[[சி. பா. ஆதித்தனார்]] மதுரையில் இருந்து வெளியிட்ட தமிழன் இதழின் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் கோவையில் திருமகள் இதழில் பணியாற்றினார். 1945 இல் கோழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார். இந்திய விடுதலைக்குப்பிறகு நாடு திரும்பியவர் தமிழன் குரல் என்ற மாதம் இருமுறை இதழை நடத்தி இழப்பை சந்தித்ததால் அதனை விற்றுவிட்டு, சென்னை வந்து ம.பொ.சியின் தமிழ் முரசு இதழில் நுணை ஆசிரியராக இணைந்தார். அக்காலக்கட்டத்தில் சிந்தாதிரிப்பேட்டையில் தமிழாசிரியராக இருந்த திருவேங்கடம் என்பவர் இவரின் எழுத்தாற்றலைக் கண்டு இவருக்கு மரபுக்கவிதைகளை எழுத கற்றுக்கொடுத்தார். இதன் பிறகு 1949 ஆம் ஆண்டில் பாரதிதாசன் தலைமையில் கோவையில் நடந்த கவியரங்கில் தன் 28 ஆம் வயதில் கலந்துகொண்டார்.
 
== திரைத்துறையில் ==
ஏவிஎம் நிறுவனத்தின் கதை இலாகாவில் மாத ஊதியத்தில் இணைந்தார். அவர்களின் [[ஓர் இரவு]] படத்தின் உதவி இயக்குநராக ஆக்கப்பட்டார். அப்படத்தின் முதல் வேலையாக இவருக்கு அண்ணாதுரை எழுதிய வசனங்களை படி எடுத்தல் ஆகும். படி எடுக்கும்போது தன்னார்வத்துடன் ஒரு காட்சிக்கு இவர் ஒரு பாடலை எழுதினார். அந்தப்பாடல் படக்குழுவுக்கு பிடித்துவிட்டதால் அது பாடல் பதிவு பெற்று, அதே படத்தில் மேலும் இரண்டு பாடல்கள் எழுத வாய்யப்பு கிடைத்தது. அநன்பிறகு பல படங்களுக்கு பாடல்களை எழுதினார்.
== அரசியிலில் ==
சிலம்புச்செல்வர் [[ம.பொ.சி.]]யின் [[தமிழரசுக் கழகம்|தமிழரசுக் கழகத்தில்]] அரசியல் பணியாற்றியவர். அக்கழகத்தின் பொதுச்செயலாலராகவும் கடமையாற்றியுள்ளார். 1974 முதல் 1980 வரை தமிழக சட்டசபை மேலவை உறுப்பினராகவும் இருந்துள்ளார். [[பாரதிதாசன்]] மீது தீவிர அபிமானம் கொண்டிருந்தவர்.
"https://ta.wikipedia.org/wiki/கு._மா._பாலசுப்பிரமணியம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது