இராஜ்நாராயண பாசு 1826 செப்டம்பர் 7 ஆம் தேதி மேற்கு வங்காளத்தின் [[தெற்கு 24 பர்கானாபர்கனா]] மாவட்ட்திலுள்ளமாவட்டத்திலுள்ள போரல் என்ற கிராமத்தில் பிறந்தார். இவரது தந்தை நந்த கிசோர் பாசு [[இராசாராம் மோகன் ராய்|இராசாராம் மோகன் ராயின்]] சீடராக இருந்தார். பின்னர் அவரது செயலாளர்களில் ஒருவராகவும் இருந்தார். குழந்தை பருவத்திலிருந்தே ஒரு பிரகாசமான மாணவரான, இராஜ்நாராயணன் [[கொல்கத்தா|கொல்கத்தாவுக்கு]] அழைத்து வரப்பட்டு ஹரே பள்ளியில் அனுமதிக்கப்பட்டார். இவர் தனது 14 வயது வரை அங்கு படித்தார். மேலும் இவரது புத்திசாலித்தனத்தினால் ஆசிரியர்களால் பாராட்டப்பட்டார்.