ஆத்திசூடி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 167:
==சகர வருக்கம்==
 
44. {{green|சக்கர நெறி நில்}}<br />
:* தர்மசக்கர நெறிப்படி வாழ வேண்டும். ( அரசன் = ஆள்பவர், தலைவர் )
 
45. {{green|சான்றோ ரினத்திரு }}<br />
:* அறிவொழுக்கங்ளில் நிறைந்த பெரியோர்களுடன் சேர்ந்து இரு.
 
46. {{green|சித்திரம் பேசேல்}}<br />
:* பொய்யான வார்தைகளை மெய் போலப் பேசாதே
 
47. {{green|சீர்மை மறவேல்}}<br />
:* புகழுக்குக் காரணமான நல்ல குணங்களை மறந்து விடாதே.
 
48. {{green|சுளிக்கச் சொல்லேல்}}<br />
:* கேட்பவருக்குக் கோபமும் வெறுப்பும் உண்டாகும் படி பேசாதீர்
 
49. {{green|சூது விரும்பேல்}}<br />
:* ஒருபொதும் சூதாட்டத்தை விரும்பாதே.
 
50. {{green|செய்வன திருந்தச் செய்}}<br />
:* செய்யும் செயல்களை தவறோ குறையோ ஏதும் இல்லாமல் செய்யவும்
 
51. {{green|சேரிடமறிந்து சேர்}}<br />
:* நீ பழகும் நபர்கள் நல்ல குணங்கள் உடையவர்களா என நன்கு ஆராய்ந்து பின்பு அவர்களுடன் பழகு.
 
52. {{green|சையெனத் திரியேல்}}<br />
:* பெரியோர் 'சீ' என வெறுக்கும் படி வீணாய்த் திரியாதே
 
53. {{green|சொற்சோர்வு படேல்}}<br />
:* பிறருடன் பேசும் பொழுது மறந்தும் குற்றமுண்டாகப் பேசாதே
 
54. {{green|சோம்பித் திரியேல்}}<br />
:* முயற்சியின்றிச் சோம்பேறியாகத் திரியாதே.
 
"https://ta.wikipedia.org/wiki/ஆத்திசூடி" இலிருந்து மீள்விக்கப்பட்டது