'''சிறுத்தொண்ட நாயனார்''' என்பவர் [[சைவ சமயம்|சைவ சமயத்தவர்களால்]] பெரிதும் மதிக்கப்படும் 63அறுபத்து நாயன்மார்களில்மூன்று [[நாயன்மார்]]களில் ஒருவர் ஆவார். <ref>{{cite book|editor1-last=மகான்கள்|author2=|title=நாயன்மார்கள்|volume= |publisher=தினமலர் நாளிதழ் |year=30 ஜூலை 2010|page=|quote=|url=https://m.dinamalar.com/temple_detail.php?id=39}}</ref>. இவர் இரண்டாம் புலிகேசியை வெற்றி கொண்ட சேனாதிபதியாக [[முதலாம் நரசிம்ம பல்லவன்|நரசிம்ம பல்லவரிடம்]] பணியாற்றினார் என்பதையும் குறிப்பிட வேண்டும். காவிரி வளநாட்டில் திருச்செங்கோட்டங்குடியில் மாமாத்திரர் குலத்தில் தோன்றியவர் பரஞ்சோதியார். இவர் ஆயுள் வேதக்கலையிலும், வடநூற்கலையிலும், படைக்கலத் தொழிலிலும் நிரம்பிய பயிற்சியுடையவர்; யானையேற்றம், குதிரையேற்றம், ஆகியவற்றிலும் வல்லவர். உள்ளம் நிறைந்த கலைத்துறைகள் ஒழிவின்றிப் பயின்றதனால், சிவன்கழலைச் சிந்தித்துப் போற்றுதலே மெய்ந்நெறியாவதெனத் தெளிந்தவர். ஈசனடியார்க்குப் பணிசெய்தலை இயல்பாகக் கொண்டவர்.