பதினொன்றாம் பயஸ் (திருத்தந்தை): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
 
வரிசை 30:
'''திருத்தந்தை பதினொன்றாம் பயஸ்''' ({{lang-it|Pio XI}}), இயற்பெயர் '''அம்புரோஜியோ தாம்யானோ அக்கில்லே ராட்டி''' ({{IPA-it|amˈbrɔ:dʒo daˈmja:no aˈkille ˈratti|lang}}; 31 மே 1857 – 10 பெப்ரவரி 1939), என்பவர் [[கத்தோலிக்க திருச்சபை]]யின் திருத்தந்தையாக 6 பெப்ரவரி 1922 முதல் 1939இல் தனது இறப்பு வரை இருந்தவர் ஆவார். பிப்ரவரி 11, 1929 இல் [[வத்திக்கான் நகர்]] உருவாக்கப்பட்டப்பின்பு அதன் முதல் [[இறைமை|அரசராகவும்]] இருந்தவர்.
 
இவர் பல [[திருமடல்|திருமடகளை]] எழுதியுள்ளார். பன்னாட்டு நிதியத்தின் முதலாளித்துவ பேராசை, [[சமூகவுடைமை]]/[[பொதுவுடைமை]]யின் தீமைகள், [[சமூக நீதி]] சிக்கள்கள் முதலியவற்றைக் குறித்து இவர் எழுதிய ''குவாத்ரஜெசிமோ ஆனோ'' என்னும் திருமடல் மிகவும் புகழ் வாய்ந்தது ஆகும். திருப்பணியாளர் எதிர்ப்பு மனநிலைக்கு (anti-clericalism) பதிலளிக்கும் வகையில் [[கிறிஸ்து அரசர் பெருவிழா]]வினை இவர் நிறுவினார். [[தாமஸ் அக்குவைனஸ்|தாமஸ் அக்குவைனஸின்]] புனிதர் பட்டமளிப்பின் 6 ஆம் நூற்றாண்டு நினைவாக 1923 ஆம் ஆண்டு ஜூன் 29 ஆம் நாள் இவர் இயற்றிய ''ஸ்டுடியோரம் துசெம்'' என்னும் திருமடலின் சாரம் கத்தோலிக்க பெய்யியல்மெய்யியல் மற்றும் இறையியலின் கருவாகப் பார்க்கப்படுகின்றது.<ref>{{Cite web |title=Studiorum ducem |url=https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |url-status=live |archive-url=https://web.archive.org/web/20130302231755/https://www.vatican.va/holy_father/pius_xi/encyclicals/documents/hf_p-xi_enc_19230629_studiorum-ducem_lt.html |archive-date=2 மார்ச் 2013 |access-date=23 ஜூன் 2013 |publisher=Vatican.va |df=dmy-all}}</ref><ref>{{Cite web |title=STUDIORUM DUCEM (On St. Thomas Aquinas)[English translation] |url=https://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |url-status=live |archive-url=https://web.archive.org/web/20160304072238/http://www.ewtn.com/library/ENCYC/P11STUDI.HTM |archive-date=4 மார்ச் 2016 |access-date=22 டிசம்பர் 2015 |publisher=[[EWTN]] |df=dmy-all}}</ref>
 
இவரின் ஆட்சியில், திருப்பீடம் மற்றும் இத்தாலிய அரசுக்கும் இடையே வெகுநாட்களாக இருந்த முரண்பாடு, 1929ஆம் ஆண்டு [[இலாத்தரன் உடன்படிக்கை]] மூலம் முடிவுக்கு வந்தது. [[மெக்சிக்கோ]], [[எசுப்பானியா]] மற்றும் [[சோவியத் ஒன்றியம்|சோவியத் ஒன்றியத்தில்]] திருச்சபை துன்புறுத்தப்படுவதையும் அருட்பணியாளர்கள் கொல்லப்படுவதையும் இவரால் தடுக்க இயலவில்லை. [[தாமஸ் மோர்]], [[பீட்டர் கனிசியு]], [[பெர்னதெத் சுபீரு]] மற்றும் [[ஜான் போஸ்கோ]] முதலிய பலருக்கு இவர் புனிதர் பட்டம் அளித்தார். [[லிசியே நகரின் தெரேசா]]வுக்கு அருளாளர் பட்டமும் புனிதர் பட்டமும் இவர் அளித்தார். [[பெரிய ஆல்பர்ட்]]டின் எழுத்துக்களின் ஆன்மீக வலிமைக்காக "இணையான புனிதர் பட்டம்" அளித்து (equivalent canonization) அவரை [[திருச்சபையின் மறைவல்லுநர்]] என அறிவித்தார். பொது நிலையினரின் பங்களிப்பை வளர்ப்பதில் மிகுதியான அக்கறை காட்டினார். தனது ஆட்சியின் இறுதியில் ஹிட்லர் மற்றும் முசோலினி கத்தோலிக்க வாழ்க்கை மற்றும் கல்வியில் செய்த ஊடுருவல்களை எதிர்த்து பல முறை வெளிப்படையாகப் பேசினார்.
"https://ta.wikipedia.org/wiki/பதினொன்றாம்_பயஸ்_(திருத்தந்தை)" இலிருந்து மீள்விக்கப்பட்டது