கிருஷ்ணதேவராயன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 49:
 
==தக்காணத்து வெற்றிகள்==
ஆண்டு நிகழ்வுகளாக இருந்த தக்காணத்துச் சுல்தான்களின் படையெடுப்புகளும், பேரரசின் நகரங்களை அழிப்பதும், கிருஷ்ணதேவராயர் காலத்தில் நின்றுவிட்டது. 1509 ஆம் ஆண்டில், கிருஷ்ணதேவராயரின் படைகள், பீஜப்பூர் சுல்தானுடன் சண்டையில் ஈடுபட்டுச் சுல்தானைக் கடுமையாகக் காயப்படுத்தி அவனைத் தோற்கடித்தன. [[யூசுப் ஆதில் கான்]] கொல்லப்பட்டதுடன், [[கோல்கொண்டா]]வும் பேரரசுடன் இணைக்கப்பட்டது. இந்த வெற்றியையும், [[பாமினி பேரரசு|பஹமானிபாமினி அரசு]]களின் ஒற்றுமை இன்மையையும் பயன்படுத்திக் கொண்ட கிருஷ்ணதேவராயர், [[பிதார்]] (Bidar), [[குல்பர்கா]] (Gulbarga), [[பீஜப்பூர்]] (Bijapur) ஆகியவற்றையும் கைப்பற்றினார். இச் சண்டையில் பிடிபட்ட சுல்தான் மஹ்மூதைப் பின்னர் விடுவித்துவிட்டார்.
 
==உள்ளூர்த் தலைவர்களுடன் போர்==
கிருஷ்ணதேவராயர் பல உள்ளூர்த் தலைவர்களான கொண்டவிடு ரெட்டிகள், புவனகிரி வெலமாக்கள் ஆகியோரை அடக்கி, [[கிருஷ்ணா ஆறு]] வரை இருந்த நிலப்பகுதிகளைக் கைப்பற்றிக் கொண்டார். 1512 இல் உம்மாத்தூர்த் தலைவன் கங்கராஜா, கிருஷ்ணராயனுடன் போரிட்டான். காவேரிக்கரையில் தோற்கடிக்கப்பட்ட கங்கராஜா காவிரியில் மூழ்கி மரணமானார். இப் பகுதி பின்னர் ஸ்ரீரங்கப்பட்டினத்துடன் இணைக்கப்பட்டது. 1516-1517 காலப்பகுதியில், கிருஷ்ணதேவராயர் [[கோதாவரி ஆறு|கோதாவரி ஆற்றுக்கு]] அப்பாலும் சென்றார்.
[[Image:Prasanna Virupaksha temple at Hampi.jpg|250px|thumb|left|அண்மையில் அகழப்பட்ட விஷ்ணு கோயில், [[ஹம்பி]]]]
{{விஜயநகரப் பேரரசு}}
 
[[பகுப்பு:விஜயநகரப் பேரரசு]]
[[பகுப்பு:இந்திய அரசர்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/கிருஷ்ணதேவராயன்" இலிருந்து மீள்விக்கப்பட்டது