ஆய்த எழுத்து (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 21:
 
பாலமொன்றினில் சந்தித்துக் கொள்கின்றனர் மூன்று இளைஞர்கள் அவர்களில் இன்பசேகர் ([[மாதவன்]]) ஒரு அடிதடிகுணம் கொண்டவன். அவன் மைக்கேலை ([[சூர்யா]]) அப்பாலத்தில் சுட்டு வீழ்த்துகின்றான். இச்சம்பவத்தை நேரில் பார்க்கிறான் அர்ஜூன் ([[சித்தார்த்]]). இதனை அனைவருக்கும் தெரிவுபடுத்துகின்றான். இச்சம்பவத்தின் பின் மைக்கேல் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றான். பின்னர் மூவரும் எவ்வாறு இச்சூழ்நிலைக்கு ஆளாக்கப்பட்டனர் என்பதனை அவர்களின் வாழ்க்கைக் கதைகளை திரைப்படம் விளக்குகின்றது. கல்லூரி மாணவனான மைக்கேல் அரசியலில் நடக்கும் அநீதிகளை மக்களுக்கு விளக்கி அவர்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துகின்றான். இதனையறிந்த அரசியல்வாதிகள் அவனைக் கொல்வதற்காக இன்பசேகரை பயன்படுத்துகின்றனர். இன்பசேகர் கூலிக்காக கொலை கொள்ளை போன்ற பல தீய செயல்களில் ஈடுபட்டு வருபவன். இருப்பினும் அவன் தன் மனைவி சசி ([[மீரா ஜாஸ்மின்]]) மீது அளவு கடந்த அன்பைக் கொண்டிருந்தான். கீதாவைக் காதலிக்கும் மைக்கேல் அவளைத்திருமணம் செய்வதற்காக ஆயத்தமான வேளையில் இன்பசேகரின் துப்பாக்கி குண்டுகளில் காயப்பட்டு பாலத்திற்கு அருகில் இருந்த நதியில் வீழ்கின்றான். இதனை அமெரிக்காவிற்குச் சென்று கல்வி பயில இருந்த மாணவனான சித்தார்த் தனது காதலியான மீராவைச் ([[திரிஷா]]) சந்திப்பதற்காக அவசரமாக மைக்கேலின் மோட்டார் வண்டியில் சென்ற போது மைக்கேல் சுட்டு வீழ்த்தப்படுவதைப் பார்த்தான்.
==மேற்கோள்கள்==
 
{{reflist}}
{{மணிரத்தினத்தின் திரைப்படங்கள்}}
{{மெட்ராஸ் டாக்கீஸ்}}
 
[[பகுப்பு:2004 தமிழ்த் திரைப்படங்கள்‎]]
[[பகுப்பு:ஏ. ஆர். ரகுமான் இசையமைத்த திரைப்படங்கள்]]
"https://ta.wikipedia.org/wiki/ஆய்த_எழுத்து_(திரைப்படம்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது