COVID-19 பற்றி அனைத்தும் அறிவோம்
தளம் சூழலியல் குழு
1. வைரஸ் என்றால் என்ன?
நோக்கங்கள்
2. COVID-19 என்றால் என்ன?
3. COVID-19இன் ஆரம்பமும், பரவலும்
1. திருகோணமலை மாவட்டத்தின் சூழலியல் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றுக்கான தீர்வுகளை ஏற்படுத்திக் கொடுத்தல்.
4. COVID-19ஐயும் தடிமனையும் ஒப்பிடுவோம்
2. திருகோணமலை மாவட்ட மக்களிடையே சூழல்லியல் தொடர்பான எண்ணக்கருக்களை விழிப்புணர்வு செயற்பாடுகளூடாக விதைத்தல்.
5. COVID-19 பரவும் விதம்
3. திருகோணமலை மாவட்டத்தின் சூழலியல் பிரச்சினைகளை ஆவணப்படுத்தல்.
6. COVID-19க்கும் எம் உடலுக்குமான போட்டி
4. திருகோணமலை மாவட்டத்தின் இயற்கை நேயர்களுக்கான ஒரு செயற்பாட்டுக் குழுவாக இருத்தல்.
7. COVID-19ஆல் எப்படி இறப்பு ஏற்படும்?
5. திருகோணமலை மாவட்ட கடல் வளத்தைப் பாதுகாத்தல்.
8. நீண்ட கால சிக்கல்கள்
6. இலங்கையின் ஏனைய இயற்கை நேயக் குழுக்களுடன் இணைந்து சூழலியல்சார் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
9. ஆபத்தில் உள்ளவர்கள்
7. திருகோணமலை மாவட்ட மக்களுக்கும் இயற்கைக்கும் இடையிலான இடைவெளியைக் குறைத்து இயற்கையுடன் இணைந்த வாழ்வை முன்னிலைப்படுத்தல்.
10. ஏன் இவ்வளவு வேகமாக பரவுகின்றது?
11. ஏன் இவ்வளவு இறப்புகள்?
செய்யக்கூடிய செயற்பாடுகள்
12. சுத்தியலும் நடனமும்
13.
1. இலங்கை சட்டத்தை மீறாத சூழலியல் செயற்பாடுகள்.
2. அரசியல் நோக்கங்களற்ற சூழலியல் செயற்பாடுகள்.
3. ஏனைய தன்னார்வக் குழுக்களுடன் இணைந்த சூழலியல் செயற்பாடுகள்.
4. அகிம்சை முறையில் சூழலியல் பிரச்சினைகளுக்கு எதிரான எதிர்ப்பைத் தெரிவித்தல்.
5. சூழலியல் பிரச்சினைகள் தொடர்பில் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு எழுத்து வடிவத்திலோ/ தொலைபேசியூடாகவோ/ இணையத்தளமூடாகவோ/ நேரடியாகவோ வன்முறைத்தன்மையின்றி தெரியப்படுத்தல், தீர்வுகளை வலியுறுத்தல்.
6. சூழலியல் செயற்பாடுகளுக்குத் தேவையான பண உதவிகளை வெளிப்படைத் தன்மையுடன் வெளி நபர்களிடமிருந்தோ அல்லது குழு உறுப்பினர்களிடமிருந்தோ அல்லது அரசியல் சார்பற்ற நிறுவனங்களிடமிருந்தோ அல்லது அரசாங்கத்திடமிருந்தோ பெற்றுக்கொள்ளல்.
7. சூழலியல் விழிப்புணர்வை ஏற்படுத்த சூழலியல் செயற்பாடுகளை, சமூக வலைத்தளங்களை, சந்திப்புக்களை, கலை சார் செயற்பாடுகளைப் பயன்படுத்தல்.
செய்யக்கூடாத செயற்பாடுகள்
1. இலங்கை சட்டத்துக்கு எதிரான செயற்பாடுகள்.
2. ஆதாரங்களின்றிய விஞ்ஞானபூர்வமற்ற செயற்பாடுகளை, எதிர்ப்புக்களை மேற்கொள்ளல்.
3. அரசியல் நோக்கத்துடன் கூடிய செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
4. தனி நபர்களை கொச்சைப்படுத்தும் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
5. அரசியல் நோக்கத்துடன் வழங்கப்படும் பண உதவிகளை ஏற்றுக்கொள்ளல்.
6. குழு உறுப்பினர்கள் சுயலாபத்துக்காக குழுச் செயற்பாடுகளில் ஈடுபடுதல்.
7. சூழலியல் குழுவின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படும் வகையில் நடந்துகொள்ளல்.
8. வன்முறை மூலம் தீர்வு காண முயற்சி செய்தல்.
கட்டமைப்பு
1. ஆகக்குறைந்து 3 குழுச் செயற்பாடுகளில் பங்குபற்றுவதன் மூலம் திருகோணமலை மாவட்டத்தில் வசிக்கும் ஒருவர் சுய விருப்பத்தினை குழுவின் உயர்மட்டக் குழுவிற்குத் தெரிவிப்பதனூடாக குழுவில் இணைந்து கொள்ளலாம்.
2. குழு உறுப்பினர்களில் விபரங்கள் ஆவணப்படுத்தப்பட்டு ஒவ்வொரு உறுப்பினருக்கும் இணைப்பு எண் வழங்கப்படும்.
3. உயர்மட்டக் குழுவில் ஒவ்வொரு ஆண்டிறுதிக் கூட்டத்தின் வாக்கெடுப்பின் மூலம் 20 உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்படுவர்.
4. உயர்மட்டக்குழுவில் ஒரு உறுப்பினர் பொருளாளராகக் கடமையாற்றுவார். அவர் குழுவின் பொருளாதார விடயங்களுக்கு பொறுப்பாக இருப்பார்.
5. உயர்மட்டக்குழுவில் ஒரு உறுப்பினர் செயலாளராகக் கடமையாற்றுவார். அவர் குழுச் செயற்பாடுகளை ஆவணப்படுத்தலுக்குப் பொறுப்பாக இருப்பார்.
6. ஏனைய அனைத்து உயர்மட்டக்குழு உறுப்பினர்களும் சமமான பொறுப்புகளைக் கொண்டிருப்பர்.
7. உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் தளத்தின் இயக்குனர் சபைக்குப் பொறுப்புக்கூறுபவர்களாக இருப்பர்.
8. தளத்தின் இயக்குனர் சபையால் எந்நேரத்திலும் குழுவிலிருந்து ஒழுக்காற்று நடவடிக்கையாக ஒருவரை நீக்க முடியும்.
|