2017ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் திகதி அன்று உச்சநீதிமன்றம் [[செயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கு|சொத்துக் குவிப்பு வழக்கில்]], [[வி. கே. சசிகலா]] உட்பட்ட நால்வருக்குத் தண்டனை வழங்கித் தீர்ப்புக்கூறிய நிலையில், அதன் பின்னர் முதல்வராக பதவியேற்றார்.<ref>[{{Cite web |url=http://news.lankasri.com/india/03/119492] |title=காப்பகப்படுத்தப்பட்ட நகல் |access-date=2017-02-27 |archive-date=2017-02-16 |archive-url=https://web.archive.org/web/20170216173307/http://news.lankasri.com/india/03/119492 |dead-url=dead }}</ref> [[அஇஅதிமுக]]வின் சட்டமன்ற கட்சித் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.<ref>[http://www.vikatan.com/news/tamilnadu/80746-edappadi-palanisamy-selected-as-admk--legislative-party-leader.html அதிமுக சட்டமன்ற கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!] - [[விகடன் குழுமம்|விகடன்]]</ref> தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் நூறாவது நாளான மே 22, 2018 அன்று, தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து ஏற்பட்ட கலவரத்தில் காவல்துறை துப்பாக்கிச் சூடு நடத்தியது. இதில் 9 பேர் கொல்லப்பட்டனர். இச்சம்பவத்தால் ஆட்சியர் மீதும், முதலமைச்சர் மீதும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.