பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 152:
 
3. SARS-CoV-2 வைரஸானது தனது ஸ்பைக் புரதங்கள் மூலம் விருந்துவழங்கிக் கலங்களின் வாங்கிகளுடன் இணைந்துகொள்கின்றது. இதுவரை நிகழ்த்தப்பட்ட ஆய்வுகளின் படி இவ்வைரஸ் மனிதர்களின் ACE-2 (Angiotensin Converting Enzyme-2) வாங்கியுடன் இணைவதாகக் கண்டறியப்பட்டுள்ளது. இவ்வாறு கலங்களினுள் செல்லும் வைரஸ் கலங்களினுள் பிரிந்து பெருகத் தொடங்கி விடும். தொற்று ஏற்பட்டு 4-5 நாட்களில் தொண்டையில் உள்ள வைரஸின் அளவு உச்சத்தைத் தொடுவதாகவும் கண்டறியப்பட்டுள்ளது.
 
தடிமனிலிருந்து கோவிட்-19 எவ்வாறு வேறுபடுகின்றது?
 
கோவிட்-19, தடிமன் இரண்டுமே வைரஸ்களால் ஏற்படுத்தப்படும் சுவாச நோய்களாகும். SARS-Cov-2 வைரஸால் கோவிட்-19உம், இன்புளுவென்சா வைரஸால் தடிமன் காய்ச்சலும் உண்டாகின்றது. இரண்டும் தொற்று நோய்களாக இருப்பதுடன் அவை பொதுவான அறிகுறிகளைக் கொண்டுள்ளமை இவற்றை வேறுபடுத்துவதைக் கடினமாக்கின்றது. எனினும் இதுவரை கண்டறியப்பட்ட விடயங்களின் படி கோவிட்-19ஆனது தடிமன் காய்ச்சலை விட பல மடங்கு ஆபத்தானதாகும்.
 
R0 எண், நோயரும்பல் காலம், வைத்தியசாலை அனுமதி வீதம், இறப்பு வீதம் என்பவை கோவிட்-19ஐயும், தடிமன் காய்ச்சலையும் வேறுபடுத்தும் பிரதான விடயங்களாக உள்ளன. R0 எண் என்பது ஒரு தொற்றுக்குள்ளான நபரால் மேலும் தொற்றுக்குள்ளாக்கக்கூடிய நபர்களின் எண்ணிக்கையின் அண்ணளவான பெறுமானமாகும். இது தடிமன் காய்ச்சலுக்கு 1.3ஆக இருக்கும் அதேவேளை, கோவிட்-19க்கு 2-2.5ஆக உள்ளது. இதிலிருந்து கோவிட்-19ஆல் தொற்றுக்குள்ளானவரால் தடிமனால் பாதிக்கப்பட்டவரை விட அதிகளவானோருக்கு நோய்த்தொற்றைப் பரப்ப முடியும் என்ற விளக்கம் பெறப்படுகின்றது.
 
அத்துடன் நோயரும்பல் காலம் என்றால் நோய்க்காரணி எம் உடலினுள் நுழைந்த நேரத்துக்கும், நோயறிகுறிகள் வெளிப்படும் காலத்துக்குமிடைப்பட்ட காலமாகும். இதை நோக்கினோமானால், கோவிட்-19 இன் நோயரும்பல் காலம் 1 தொடக்கம் 14 நாட்களாகவும், தடிமனின் நோயரும்பல் காலம் 1 தொடக்கம் 4 நாட்களாகவும் உள்ளது.
 
அத்துடன் கோவிட்-19இன்
"https://ta.wikipedia.org/wiki/பயனர்:G.Kiruthikan/மணல்தொட்டி" இலிருந்து மீள்விக்கப்பட்டது