எத்தியோப்பியாவின் வரலாறு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
'''எத்தியோப்பியாவின் வரலாறு'''
இந்தப் பகுதியில் வளர்ச்சியடைந்த முதல் இராச்சியங்களுள் ஒன்று டிமிட் இராச்சியம். கிமு 10 ஆம் நூற்றாண்டில் தோன்றிய இது அதன் தலைநகரை யெகாவில் நிறுவியது. கிபி முதலாம் நூற்றாண்டில், டைகிரே பகுதியில் அக்சுமைட் இராச்சியம் எழுச்சியுற்றது. அக்சும் என்பதைத் தலைநகராகக் கொண்ட இது, யேமன், மேரோ ஆகியவற்ரையும் அடக்கி செங்கடற்பகுதியின் முக்கிய வல்லரசாக ஆனதுடன், நான்காம் நூற்றாண்டுத் தொடக்கத்தில் கிறித்தவ மதத்தைத் தழுவிக்கொண்டது. இசுலாம் மதத்தின் எழுச்சியுடன் அக்சுமைட் பேரரசு வீழ்ச்சியடையத் தொடங்கியது. இசுலாமின் வருகையால் எத்தியோப்பியர்கள் பாதுகாப்புக்காக தெற்கேயுள்ள உயர்நிலங்களை நோக்கிப் புலம்பெயர வேண்டி ஏற்பட்டது. அக்சுமைட்டைத் தொடர்ந்து சக்வே வம்சத்தினர் ஆட்சிக்கு வந்து, லாலிபெலாவைத் தலைநகரம் ஆக்கினர். 13 ஆம் நூற்றாண்டில் சக்வே வம்சத்தை அகற்றிவிட்டு, சொலமனிய வம்சம் ஆட்சிக்கு வந்தது. தொடக்க சொலமனியக் காலத்தில், எத்தியோப்பியாவில் படைத்துறைச் சீர்திருத்தங்களும், பேரரசு விரிவாக்கமும் இடம்பெற்றன. இதன் மூலம் ஆப்பிரிக்கக் கொம்புப் பகுதியில் எத்தியோப்பியா ஆதிக்கம் செலுத்தக் கூடியதாக இருந்தது. [[போர்த்துக்கல்|போர்த்துக்கேய]] மதபோதகர்களும் இக்காலத்தில் எத்தியோப்பியாவுக்கு வந்தனர்.
|